EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ

EPFO Update: பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். இந்த தொகை அனைவருக்கும் மாறுபடும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 4, 2023, 12:40 PM IST
  • EPF கணக்கில் எவ்வளவு தொகை வரும்?
  • எவ்வளவு வட்டி கிடைக்கும்?
  • பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை எப்படி செய் செய்வது?
EPF கணக்கில் வட்டி: தீபாவளி பரிசாக வருகிறதா பம்பர் தொகை? அதிரடி அப்டேட் இதோ title=

EPFO Update: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. அலுவலக பணிகளில் இருக்கும் பெரும்பான்மையானோருக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இபிஎஃப் கணக்கில் பங்களிக்கப்படுகின்றது. பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது. 

இபிஎஃப் வட்டி (EPF Interest)

பல மாதங்களுக்கு முன்பு, பிஎஃப் (PF) கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டித் தொகை பற்றுய தகவலை அரசாங்கம் அறிவித்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து பல நாட்களாக தங்கள் பிஎஃப் கணக்கில் வட்டித் தொகை எப்போது வரவு வைக்கப்படும் என்று அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அரசாங்கம் மிக விரைவில் வட்டித் தொகையை பிஎஃப் சந்தாதாரர்களின் கணக்கில் டெபாசிட் செய்யும் என இப்போது கூறப்பட்டுள்ளது. இது பண்டிகை காலங்களில் ஊழியர்களுக்கு மிக நல்ல செய்தியாக இருக்கும். 

எவ்வளவு வட்டி கிடைக்கும்?

பிஎஃப் கணக்கு (PF Account) வைத்திருப்பவர்களுக்கு இந்த நிதியாண்டில் 8.15 சதவீத வட்டி அறிவிக்கப்பட்டது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச தொகையாகும். இது அரசாங்கம் மூலம் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசாக கருதப்படுகின்றது. 

வட்டித் தொகை (PF Interest Amount) எப்போது கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறித்து பல கேள்விகள் இருந்து வந்தன. சமீபத்தில் அதற்கான பதிலும் கிடைத்துள்ளது.  2022-23 நிதியாண்டில் பிஎஃப் உறுப்பினர்களுக்கு மொத்த வட்டி விகிதமாக 8.15 சதவீதத்தை வழங்குவதற்கு தொழிலாளர் அமைச்சகம் செயல்பட்டு வருவதாக மத்திய தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ் அறிக்கை அளித்துள்ளார். இதுமட்டுமின்றி மொத்தம் 24 கோடி கணக்குகளுக்கு 8.15 சதவீத வட்டித் தொகை கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இபிஎஃப்ஒ வட்டி விகிதம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சரியான திசையில் உள்ளதில் தனது அரசாங்கம் திருப்தி அடைவதாகவும் அவர் கூறினார். நவம்பர் இறுதிக்குள் இந்த வட்டித்தொகை அனைத்து சந்தாதாரர்களின் கணக்குகளிலும் டெபாசிட் செய்யப்பட்டுவிடும் என நம்பப்படுகின்றது. 

மேலும் படிக்க | ஊழியர்களுக்கு தீபாவளி சர்ப்ரைஸா? 44% ஊதிய ஏற்றம்.. காத்திருக்கும் 2 நல்ல செய்திகள்!!

EPF கணக்கில் எவ்வளவு தொகை வரும்

பிஎஃப் சந்தாதாரர்களின கணக்கில் எவ்வளவு தொகை வரும் என்பதை அறிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். இந்த தொகை அனைவருக்கும் மாறுபடும். இது ஊழியர்களின் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை பொறுத்தது. சில உதாரணங்கள் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ.4 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், 8.15 சதவீத விகிதத்தில் ரூ.33,000 வட்டித் தொகை கணக்கில் வரவு வைக்கப்படும். கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், வட்டியாக சுமார் ரூ.42,000 கிடைக்கும். ஊழியரின் பிஎஃப் கணக்கில் ரூ.6 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், சுமார் ரூ.50 ஆயிரம் வட்டியாக டெபாசிட் செய்யப்படும்.

பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை எப்படி செய் செய்வது?

உறுப்பினர்கள் தங்கள் கணக்கு இருப்பை அதாவது பேலன்சை செக் செய்து அறிய இபிஎஃப்ஓ ​​பல வழிகளை வழங்கியுள்ளது . இவற்றில் மிக எளிதான வழி, எஸ்எம்எஸ் அனுப்புவது. இபிஎஃப்ஓ ​​​​கணக்கு வைத்திருப்பவர் EPF இருப்பை (EPF Balance) அறிய, இபிஎஃப்ஓ ​​இல் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து SMS அனுப்பலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 7738299899 என்ற எண்ணுக்கு SMS (EPFOHO UAN) அனுப்ப வேண்டும். அதன் பிறகு வரும் பதிலில், திரையில் கணக்கு விவரங்களைக் காணலாம். மிஸ்ட் கால் மூலமாகவும் உறுப்பினர்கள் தங்கள் கணக்கு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பிஎஃப் சந்தாதாரர்கள் உமங் செயலியை (UMANG App) பதிவிறக்கம் செய்தும், வீட்டில் இருந்தபடியே தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்க்கலாம். மேலும் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் ( epfindia.gov.in) சென்றும் கணக்கில் உள்ள தொகையை பற்றி தெரிந்து கொள்ளலாம். 

இந்தியாவில் இபிஎஃப் ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாக உள்ளது. இது ஊழியர்களுக்கு நிதி பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. 

மேலும் படிக்க | NPS முக்கிய அப்டேட்: பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றம்.. உடனே தெரிந்துகொள்ளுங்கள்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News