Tax Saving Tips: வருமான வரி செலுத்துவோர் FY23-24க்கான வரிக் கணக்கை தாக்கல் செய்து பெரும்பாலானோருக்கு ஐடிஆர் ரிடர்ணும் வந்திருக்கும். இனி புதிய நிதியாண்டிற்கான வருமான வரியைச் சேமிக்க வரி செலுத்துவோர் (Taxpayers) தயாராக வேண்டும். சில திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் சிறந்த லாபம் கிடைப்பதோடு வருமான வரியையும் மிச்சப்படுத்த முடியும். அத்தகைய சில திட்டங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரி சேமிப்பு FD (Tax Saving FD)


5 வருட எஃப்டி -இல் (Fixed Deposit) பணத்தை முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு கிடைக்கும். 5 வருடங்களுக்கும் குறைவான FD -களில் இது கிடைக்காது.  5 வருட FD -கள், வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் என இரண்டிலும் கிடைக்கும். தபால் நிலையங்களில் 5 வருட FD -களுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. வங்கிகளில் 5 ஆண்டு கால FD -களுக்கு வட்டி விகிதங்கள் வேறுபட்டிருக்கும். 


ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS)


ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்டுகள் என்று அழைக்கப்படுகிறது. வருமான வரி சேமிப்பு திட்டத்தில் முதலீட்டுக்கான லாக் இன் காலம் 3 ஆண்டுகள் ஆகும். இதற்குப் பிறகு, முதலீட்டாளருக்கு விருப்பம் இருந்தால், பணத்தை எடுக்கலாம். இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு கிடைக்கும். எனினும், இதன் வருவாய் சந்தை அடிப்படையிலானது.


தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Saving Certificate)


NSC என அழைக்கப்படும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்தும் வரியை சேமிக்கலாம். இதற்கு இந்த திட்டத்தில் குறைந்தது 5 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில், 7.7% வட்டி வழங்கப்படுகிறது. இதிலும் பிரிவு 80சி கீழ் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.


மேலும் படிக்க | EPS உறுப்பினர்களுக்கு சூப்பர் செய்தி: இனி அனைத்து வங்கிகளிலும் ஓய்வூதியம் பெறலாம்


பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)


PPF எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு E-E-E பிரிவில் வைக்கப்பட்டுள்ளது. அதாவது இதில் முதலீட்டாலரின் முதலீடு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை என அனைத்தும் முற்றிலும் வரி விலக்கு கிடைக்கும். இந்த திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடையும். முதலீட்டாளர் விரும்பினால், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ள அதை நீட்டிக்கலாம். இந்த திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.


தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension System)


NPS என்றழைக்கப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டமும் சந்தையுடன் இணைக்கப்பட்ட அரசாங்கத் திட்டமாகும். இதில், என்பிஎஸ் உறுப்பினர்களுக்கு (NPS Members) 60 வயதில் ஓய்வூதிய நிதி வழங்கப்படுகிறது, இதனுடன், உங்கள் மொத்த வருமானத்தில் 40 சதவீதத்துடன் ஆனுவிட்டியும் வாங்கப்படுகிறது, இதன் மூலம் உங்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படுகிறது. வரியைச் சேமிப்பதிலும் இந்தத் திட்டம் மிகவும் சிறந்ததாக உள்ளது.தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) 2 லட்சம் வரை வரி விலக்கு (Tax Exemption) மற்றும் 60% தொகையை திரும்பப் பெறும்போது வரி விலக்கு என வரி விலக்கு பலன்களும் கிடைக்கின்றன. இதில் ரூ. 1.5 லட்சம் வரம்பை அடைந்த பிறகு ரூ.50 ஆயிரம் கூடுதல் முதலீட்டில் வரி விலக்கு கிடைக்கும். 


மேலும் படிக்க | இந்த தேதியில் டிஏ ஹைக்: அரசு ஊழியர்களுக்கு அசத்தல் ஊதிய உயர்வு.... 8வது ஊதியக்குழு எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ