7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முக்கிய முடிவை எடுத்துள்ளது, இதனால் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் இப்போது பாதிக்கப்படப் போகிறார்கள். மோடி அரசு மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அதிகரிக்கப் போகிறது என்று நம்பப்படுகிறது, அதன் பிறகு சம்பளத்தில் அதிகரிப்பு இருக்கும் என்று நம்பப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இம்முறையும் அரசாங்கம் அகவிலைப்படியை சுமார் 4 சதவிகிதம் உயர்த்தும், இது மழைக்காலத்தில் ஒரு பெரிய பரிசாக அமையும். இது தொடர்பாக கூடிய விரைவில் அரசாங்கம் முடிவை எடுக்கலாம், என்றும் இதன் பலன் சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு கிடைக்கக்கூடும் என நம்பப்படுகிறது. இருப்பினும் அகவிலைப்படி அதிகரிப்பதற்கான தேதியை அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை, என்றாலும் ஊடக அறிக்கைகள் விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்று கூறி வருகின்றது.


மேலும் படிக்க | 7th Pay Commission டிஏ ஹைக்: ஊதியத்தில் அதிரடி உயர்வு.. நாளை மறுநாள் முக்கிய அறிவிப்பு


அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
மத்தியில் ஆளும் மோடி அரசு மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தினால், அது 46 சதவீதமாக உயரும். இதற்குப் பிறகு, அடிப்படை சம்பளத்தில் பம்பர் அதிகரிப்பு இருக்க முடியும் என்றும் கருதப்படுகிறது. இதனிடையே தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



டிஏ மேலும் 4 சதவீதம் அதிகரிக்கலாம்
இந்நிலையில் ஜூலை 2023ன் அகவிலைப்படி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால், 2023 ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ இன்டெக்ஸ் தரவுகளில் இருந்து அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது. 4 சதவீதம் அதிகரித்த பிறகு, ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவீதத்தை எட்டும். இது குறித்து செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியை அதிகரிப்பதன் மூலம் மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அரசாங்கம் நல்ல செய்தியை வழங்கும். இதன் அறிவிப்பு வந்த பிறகே ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் கிடைக்கும். எனினும் ஜூலை 2023 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் அரியர் தொகை ஊழியர்களுக்கு கிடைக்கும். 


ஏழாவது ஊதியக் குழுவின் அறிக்கையின்படி, அகவிலைப்படி ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிப்படுகிறது, இதன் விகிதங்கள் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது அகவிலைப்படி அதிகரிப்பு இருந்தால், இந்த விகிதங்கள் 1 ஜூலை 2023 முதல் அமலுக்கு வரும். இப்படிப்பட்ட நிலையில் தற்போது சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது. அதன்படி உங்களின் அடிப்படை சம்பளம் ரூ.30,000 என்றால், 4 சதவீத அகவிலைப்படியின் படி, மாதத்திற்கு சுமார் ரூ.12,000 வரை அதிகரிக்கும்.



ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்தும் நல்ல செய்தி வெளியாகும்
இதற்கிடையில் மோடி அரசு மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து நல்ல செய்தியை வழங்க முடியும், இது தொடர்பாக ஊழியர்கள் இடையே அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. இது நடந்தால், மழைக்காலத்தில், ஊழியர்களுக்கு இரண்டு பரிசுகள் கிடைக்கும். இருப்பினும் இது குறித்தும் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ஊடக அறிக்கைகளில் பெரிய கூற்றுக்களை வைத்து வருகின்றது.


மேலும் படிக்க | 7th Pay Commission: வாவ்!! ஊழியர்களுக்கு மத்திய அரசின் 4 பரிசுகள்... குஷியில் ஊழியர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ