மோடி அரசின் PMVVY திட்டம்: மத்திய அரசால் ஒரு சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது, இதில் திருமணமானவர்கள் பெரிய பலன்களைப் பெறப் போகின்றனர். தற்போது திருமணமான தம்பதிகளுக்கு முழுத் தொகையாக ரூ.51,000 வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அரசு திட்டத்தின் பெயர் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா ஆகும், இந்த திட்டமானது ஓய்வூதியத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்கும் நோக்கத்துடன் 2017 இல் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் 31 வரை பயன்பெறலாம்
இந்த நிலையில் வருகிற 31 மார்ச் 2023 வரை இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் கணவன், மனைவி இருவரும் பயனடைவார்கள், மேலும் திருமணமானவர்களுக்கு முதுமையில் அரசு ஓய்வூதியம் வழங்கும்.


மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வெளியானது புதிய விதி!


இந்த சிறப்பு அரசு திட்டம் என்னவாகும்?
பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா என்பது ஒரு சமூக பாதுகாப்பு திட்டமாகும், இதன் கீழ் விண்ணப்பதாரருக்கு ஆண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது, இந்தத் திட்டம் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் இயக்கப்படுகிறது. மேலும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். அத்துடன் இந்தத் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில், மற்ற திட்டங்களுடன் ஒப்பிடுகையில், மூத்த குடிமக்கள் அதிக வட்டி இதில் பெறுகின்றனர்.


51,000 ரூபாய் பெறுவது எப்படி
கணவன்-மனைவி இருவரும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், இருவரும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனாவில் சுமார் 3 லட்சத்து 7 ஆயிரத்து 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும், அதாவது மொத்தம் 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.40 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, முதலீட்டாளரின் ஆண்டு ஓய்வூதியம் ரூ.51 ஆயிரத்து 45 ஆக இருக்கும். மறுபுறம் இந்த ஓய்வூதியத்தை மாதந்தோறும் பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியமாக 4100 ரூபாய் வழங்கப்படும்.


ஓய்வூதிய பலன் கிடைக்கும்
இந்தத் திட்டத்தில் உங்கள் முதலீடு 10 ஆண்டுகள் ஆகும். உங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வருடாந்திர அல்லது மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். நீங்கள் 10 ஆண்டுகள் இந்தத் திட்டத்தில் இருந்தால், 10 ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் முதலீடு உங்களுக்குத் தொகை திருப்பித் தரப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சரண்டர் செய்யக்கொள்ள முடியும்.


மேலும் படிக்க | மக்களே உசார்! மார்ச் 31-க்குள் நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ