Aadhaar Card Update Deadline Extended : ஆதார் அட்டை தகவல்கள் மற்றும் ஆவணங்களை இலவசமாக (Free of Cost)புதுப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 14, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் 14, 2023 என நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. தற்போது இது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆதார் அட்டைதாரர்கள் (Aadhaar Card Holders) தங்கள் தகவலை சரிபார்த்து புதுப்பிக்க வேண்டும் என UIDAI விரும்புகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

துல்லியமான மக்கள்தொகைத் தரவு அவசியம் என்றும், அதற்கு அடையாளச் சமர்ப்பிப்பு மற்றும் முகவரிச் சான்றின் சான்றிதழ்கள் தேவை என்றும் யுஐடிஏஐ கூறியுள்ளது. பெயர் மற்றும் முகவரியில் மாற்றம் தவிர, இறப்பு அல்லது திருமண நிலை மாற்றம் போன்ற வேறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், அவற்றை புதுப்பிக்குமாறும் குடிமக்களை UIDAI கேட்டுக் கொண்டுள்ளது. 


இலவச சேவை myAadhaar போர்ட்டலில் மட்டுமே கிடைக்கும். இருப்பினும், நீங்கள் ஆதார் மையங்களில் சென்று மாற்றங்களை செய்ய விரும்பினால் அதற்கு ரூ. 50 கட்டணம் விதிக்கப்படும். 


ஆன்லைனில் ஆதார் அட்டையைப் புதுப்பிப்பது எப்படி: படிப்படியான வழிகாட்டி இதோ


- முதலில் uidai.gov.in என்ற UIDAI இணையதளத்திற்குச் சென்று லாக் இன் ஐடி (Log In ID) மற்றும் கடவுச்சொல்லை (Password) உருவாக்க வேண்டும்.


- இதற்குப் பிறகு, "My Aadhaar" டேபை கிளிக் செய்து, கீழ்தோன்றும் மெனுவிலிருந்து "Update Your Aadhaar" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 


- பின்னர் "Update Aadhaar Details (Online)" பக்கத்தில் உங்கள் ஆதார் எண்ணையும் கேப்ட்சா சரிபார்ப்புக் குறியீட்டையும் உள்ளிட வேண்டும். அதன் பிறகு "Send OTP" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.


மேலும் படிக்க | UPI: தவறான எண்ணுக்கு பணம் சென்றுவிட்டதா? கவலை வேண்டாம்.. 48 மணி நேரத்தில் ரீஃபண்ட் கிடைக்கும்


- பெறப்பட்ட OTP ஐ உள்ளிட்டு "Login" என்பதைக் கிளிக் செய்யவும். 


- நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களைத் தேர்ந்தெடுத்து புதிய தகவலை கவனமாக நிரப்பவும். 


- தேவையான மாற்றங்களைச் செய்த பிறகு, "Submit" என்பதைக் கிளிக் செய்யவும். 


- பின்னர் உங்கள் புதுப்பிக்கப்பட்ட விவரங்களைச் சரிபார்க்க தேவையான ஆதரவு ஆவணங்களை ஸ்கேன் செய்து அப்லோட் செய்யவும்.


- அதன் பிறகு "Submit Update Request" என்பதை கிளிக் செய்து செயல்முறையை நிறைவு செய்யவும். 


ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?


நம் நாட்டை பொறுத்தவரை ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக உள்ளது. இந்த ஆவணம் இல்லாமல் பல அரசு பணிகள், வங்கி, தனியார் துறை என எந்த வித பணிகளையும் நிறைவு செய்ய முடியாது. ஆதார் அட்டையில் பழைய தகவல்கள் ஏதும் இருந்து, அது அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் அதனால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம். மேலும், சமீபத்திய தகவல்களுடன் ஆதார் புதுப்பிக்கப்படாவிட்டால் மோசடிக்கான வாய்ப்பும் அதிகரிக்கக்கூடும். இதனை கருத்தில் கொண்டு 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டைகள் புதுப்பிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியிருந்தது. ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிக்கும் வசதியை UIDAI வழங்குகிறது. ஆதார் தகவல்களை ஆன்லைனிலும், ஆஃப்லைனில் ஆதார் சேவை மையங்களுக்கு சென்றும் புதுப்பிக்கலாம். எனினும், சில விஷயங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது. அதற்கு நீங்கள் ஆதார் மையம் அல்லது CSC மையத்திற்கு செல்ல வேண்டும்.


மேலும் படிக்க | Post Office MIS திட்டம்: வட்டியிலேயே லட்சக்கணக்கில் லாபம், மாதா மாதம் பம்பர் வருமானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ