EPS Pension: மத்திய அரசாங்கம் சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அதாவது யுபிஎஸ் -ஐ (UPS) அறிமுகம் செய்தது. இதன் கீழ் 25 ஆண்டுகளுக்கு பணிபுரிந்த ஒரு ஊழியருக்கு, அவரது பணி ஓய்விற்கு முந்தைய 12 மாத சராசரி ஊதியத்தில் 50 சதவீத தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். தேசிய ஓய்வூதிய அமைப்பை நிறுத்திவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme) செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசாங்கம் UPS -ஐ அறிமுகம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

UPS 1 ஏப்ரல், 2025 முதல் நாட்டில் அமலுக்கு வரும். மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலையான ஓய்வூதியத்திற்கான உத்தரவாதம் கிடைத்த சில நாட்களில் பணியாளர் வருங்கால வைப்ப நிதி அமைப்பின் கீழ் வரும் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கும் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது. ஊழியர்களுக்கு EPFO -வின் கீழ் உள்ள ஊழியர் ஓய்வூதிய திட்டமான EPS மூலம் வழங்கப்படும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது குறித்து சமீபத்தில் ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. அதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.


சென்னை EPF ஓய்வூதியதாரர்கள் நல சங்கம் ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மாண்டியாவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியுடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை 9,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று இந்த கடிதம் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட UPS மூலம் சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். EPS -இன் கீழ் சுமார் 75 லட்சம் ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்த அம்சத்தை EPF ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் தங்களது கடிதத்தில் குறிப்பிட்டு காட்டியுள்ளனர். இந்த நிலையில் EPS 1995 இன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பது சரியானது அல்ல என்பதும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்திற்கான (Minimum Monthly Pension) இந்த விவகாரம் பிரதமர் மோடியிடம் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதையும் ஓய்வூதியதாரர்கள் நலச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.


Employee Pension Scheme 1995 


ஜூலை 2024 -இல் ஓய்வூதியதாரர்களின் அமைப்பான இபிஎஸ் 95 தேசிய போராட்டக் குழு ஓய்வூதியத்தை (Pension) ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக டெல்லியில் போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம். இந்தக் குழுவின் தலைமையகம் மகாராஷ்டிராவில் உள்ளது. இந்தக் குழுவில் சுமார் 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் (Pensioners) மற்றும் 7.5 கோடி தொழில்துறை ஊழியர்கள் உள்ளனர்.


2014 செப்டம்பரில், மத்திய அரசு, பணியாளர்கள் ஓய்வூதிய திட்டமான EPS 1995 -இன் கீழ் வரும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1,000 குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை அறிவித்தது. எனினும் கடந்த ஆண்டு தொழிலாளர் அமைச்சகம் நிதி அமைச்சகத்திற்கு இது குறித்து ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளது. இபிஎஸ் 95 இன் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை 2,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனினும், இதற்கு இன்னும் நிதியமைச்சகம் ஒப்புதலை அளிக்கவில்லை.


மேலும் படிக்க | முக்கிய ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவங்களுக்கு அபராதம்: ஆர்பிஐ அதிரடி


EPS Pension Calculation Formula: EPS ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?


EPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான தற்போதைய சூத்திரம் பின்வருமாறு:
கடந்த 60 மாதங்களுக்கான அடிப்படை சம்பளம் X வேலை காலம்/70.


பணியாளரின் பணிக்காலத்தில் EPF மற்றும் EPS க்கு எவ்வளவு பங்களிக்கப்படுகிறது?


ஒவ்வொரு மாதமும், ஏதேனும் ஒரு நிறுவனம் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீத தொகையை இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் அளிக்கின்றது. இபிஎஃப் சந்தாதாரர் (EPF Subscriber) அளிக்கும் பங்களிப்பு முழுதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனத்தின் பம்ங்களிப்பில், 8.33 சதவீதம் பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்திலும் (இபிஎஸ்), 3.67 சதவீதம் பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதியிலும் (இபிஎஃப்) டெபாசிட் செய்யப்படுகின்றன.


ஊதிய உச்சவரம்பை அதிகரித்தால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பை கணக்கிடுவதற்கான சம்பள வரம்பை ரூ.15,000 லிருந்து ரூ.21,000 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தொழிலாளர் அமைச்சகம் சமீபத்தில் நிதி அமைச்சகத்திடம் முன்மொழிந்துள்ளது. செப்டம்பர் 1, 2014 முதல், இபிஎஸ் ஓய்வூதியத் திட்டத்தைக் கணக்கிடுவதற்கான சம்பள வரம்பு ரூ.15,000 ஆக உள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தால் முன்மொழியப்பட்ட சம்பள வரம்பு உயர்வுக்கான (Wage Hike Ceiling) ஒப்புதல் கிடைத்தால், ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். இதனால், லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 3%-4% டிஏ ஹைக்: இந்த நாளில் அறிவிப்பு.. ஊதிய உயர்வுடன் டிஏ அரியரும் கிடைக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ