இந்தியன் ரயில்வே அளிக்கும் இலக்கு எச்சரிக்கை அலாரம் சேவை: நீங்கள் அடிக்கடி இரவில் இரயில் பயணம் மேற்கொள்ளும் நபரா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இரவு பயணத்தின் போது பயணிகள் பெரும்பாலும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள். அன்றாட பிசியான வாழ்வில், இப்படிப்பட்ட இரவு நேர ரயில் பயணங்கள் இவர்களுக்கு தூங்குவதற்கு நல்ல வாய்ப்பை அளிக்கின்றது. ஆனால், இதில் ஒரு சங்கடமும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூக்கம் காரணமாக, பல நேரங்களில் பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தில் இறங்காமல் தவறவிட்டு விடுகிறார்கள். உங்களுக்கும் இப்படி நடந்திருந்தால், இனி கவலைப்படத் தேவை இல்லை. இந்த பிரச்சனையை சரி செய்ய தற்போது இந்திய ரயில்வே புதிய வசதியை தொடங்கியுள்ளது. புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை தவற விட வாய்ப்பில்லை. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை ரயில்வே எடுத்துள்ளது.


பயணிகள் 20 நிமிடங்களுக்கு முன்னதாக எழுப்பப்படுவார்கள்


இதற்கு முன்னரும், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் வை-பை, எஸ்கலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த புதிய ரயில் சேவை தொடங்கப்பட்ட பிறகு, பயணிகள் இரவில் ரயிலில் நிம்மதியாக தூங்க முடிகிறது. தூக்கத்தில் இறங்க வேண்டிய ஸ்டேஷனைத் தவறவிட்டு விட்டால் என்ன செய்வது என்ற கவலை இனி அவர்களுக்கு இருக்காது. ரயில்வேயால் தொடங்கப்பட்ட இந்த வசதியில், பயணிகள் தாங்கள் அடைய வேண்டிய ரயில் நிலையத்தை அடைவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் எழுப்பப்படுவார்கள்.


மேலும் படிக்க | ரயில் ஆபத்தில் இருந்தால் இப்படிதான் சத்தம் வரும்... 11 வகையான ரயில் ஹாரன்களை தெரிஞ்சிக்கோங்க!


இந்த வசதி தொடங்கப்பட்டதன் காரணம் என்ன?


ரயில்வேயால் தொடங்கப்பட்ட இந்த சிறப்பு சேவையின் பெயர் 'டெஸ்டினேஷன் அலர்ட் வேக் அப் அலாரம்' (Destination alert wake up alarm) ஆகும். ரயிலில் அசந்து தூங்குபவர்கள் குறித்து ரயில்வே வாரியத்துக்கு பலமுறை தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் பல முறை தாங்கள் இறங்க வேண்டிய நிலையத்தை தவற விடுவதும் ரயில்வே துறைக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ரயில்வே இந்த வசதியை தொடங்கியுள்ளது. 139 எண் விசாரணை சேவையில் (139 Number Inquiry Service) இந்த சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது.


இந்த நேரத்தில் இந்த வசதி கிடைக்கும்


இந்த சேவையின் கீழ் பயணிக்கும் பயணிகள் 139 என்ற விசாரணை அமைப்பில் எச்சரிக்கை தேவைக்கான வசதியை கேட்கலாம். இரவு 11 மணி முதல் காலை 7 மணி வரை உள்ள இந்த வசதியை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் நன்மை என்னவென்றால், இந்த சேவையைப் பயன்படுத்தினால், ரயில் நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பு நீங்கள் அதற்கான அலர்ட்டை பெறுவீர்கள். இந்தச் சேவையைப் பயன்படுத்தும்போது, நீங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் உங்கள் தொலைபேசிக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.


இந்த சேவையை பெறுவது எப்படி?


- ‘டெஸ்டினேஷன் அலர்ட் வேக்கப் அலாரம்’ சேவையை பெற, பயணிகள் IRCTC ஹெல்ப்லைன் 139ஐ அழைக்க வேண்டும். 


- மொழியைத் தேர்ந்தெடுத்த பிறகு, இலக்கு விழிப்பூட்டலுக்கு முதலில் எண் 7 -ஐயும் பிறகு எண் 2 -ஐயும் அழுத்த வேண்டும். 


- இப்போது உங்கள் 10 இலக்க PNR ஐ உள்ளிடவும். 


- அதை உறுதிப்படுத்த 1 -ஐ டயல் செய்யவும். 


- இந்த செயல்முறையை செய்து முடித்த பின்னர், பயணிகள் தாங்கள் இறங்க வேண்டிய நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன் விழித்தெழுதல் எச்சரிக்கையைப் (வேக்அப் அலர்ட்) பெறுவார்கள்.


மேலும் படிக்க | ரயில்வே மூலம் மாதாமாதம் ரூ. 80 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் - அது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ