அஞ்சல் அலுவலகத் திட்டங்களுக்கான வருமானச் சான்று: கடந்த சில காலாண்டுகளில் அஞ்சல் அலுவலக சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக வட்டி அளிக்கப்படுவதால், அவற்றில் மக்கள் செய்யும் முதலீடு அதிகரித்துள்ளது. பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தபால் அலுவலக திட்டங்களின் புகழ் அதிகரித்துள்ளது. ஆனால் இதனுடன், கருப்புப் பணக் குவிப்பு மற்றும் பணமதிப்பிழப்பு குறித்தும் அரசாங்கம் கவலை கொண்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டங்கள் தகாத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு வழிமுறையாக மாறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு புதிய விதி கொண்டு வரப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிய உத்தரவு என்ன?


அஞ்சல் துறை சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், 10 லட்ச ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் வருமானச் சான்றிதழைக் காட்டுவது கட்டாயம் என அஞ்சல் துறை சமீபத்தில் வெளியிட்ட ஒரு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 10 லட்சத்துக்கு மேல் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், சிறு சேமிப்புத் திட்டத்தில், வருமான ஆதாரத்தை அளிக்க வேண்டும். இது தவிர, தபால் அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு முதலீட்டையும் KYC/PMLA இணங்குதல் விதிமுறைகளின் வரம்பிற்குள், அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.


புதிய விதி ஏன் வந்தது?


மே 25, 2023 அன்று அஞ்சல் துறையால் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. அதில் சிறுசேமிப்புத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களில் ஒரு பிரிவினரிடம் இருந்து வருமானச் சான்று கேட்குமாறு அஞ்சல் அலுவலக அதிகாரிகளிடம் திணைக்களம் கேட்டுக் கொண்டது. 'உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்'/பணமோசடி தடுப்பு (Know Your Customer/Anti Money Laundering ) மற்றும் பயங்கரவாத நிதியுதவி தொடர்பான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதன் காரணமாக இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதிகளில், வாடிக்கையாளர்களை குறைந்த, நடுத்தர மற்றும் அதிக ஆபத்துக்கு ஏற்ப பிரிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளர்கள் KYC செய்வதோடு அவர்கள் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தின் ஆதாரத்தையும் அவர்கள் வழங்க வேண்டும்.


மேலும் படிக்க | Indian Railways முக்கிய அப்டேட்: இதற்கெல்லாம் ரயிலில் அனுமதி இல்லை.. மீறினால் தண்டனை!!


வருமானச் சான்றாகக் கொடுக்க வேண்டிய ஆவணங்கள் என்ன?


- வங்கி அல்லது தபால் அலுவலகத்தின் கணக்கு அறிக்கை, அதில் அந்த பணத்தின் ஆதாரமும் தெரிய வேண்டும்.


- கடந்த மூன்று நிதியாண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு


- விற்பனைப் பத்திரம்/ பரிசுப் பத்திரம்/ உயில்/ நிர்வாகக் கடிதம்/ வாரிசுச் சான்றிதழ்


- அல்லது அந்த நிதியின் ஆதாரத்தை நிரூபிக்கும் ஏதாவது ஒரு ஆவணம்.


இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய, நீங்கள் சில ஆவணங்களையும் வழங்க வேண்டும், இது KYC செயல்முறையின் போது உங்களிடம் கேட்கப்படலாம்.


- அடையாளச் சான்றிதழில் நீங்கள் ஆதார் அல்லது பான் கொடுக்கலாம்.


- முகவரிச் சான்றில் ஆதார் அல்லது பான் கார்டையும் கொடுக்கலாம். இவற்றில் தற்போதைய முகவரி பதிவு செய்யப்படவில்லை என்றால், பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்களையும் கொடுக்கலாம்.


- உங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.


தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள்:


இந்தியா போஸ்ட், முதலீட்டாளர்களுக்கு பல டெபாசிட் திட்டங்களை வழங்குகிறது. இவை பொதுவாக தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது, அரசு 9 தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களை வழங்குகிறது. இந்த ஒன்பது சிறு சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு பத்திரம் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) ஆகியவை அடங்கும். இந்த திட்டங்களில் காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதங்களை அரசாங்கம் மாற்றிக்கொண்டே இருக்கிறது.


மேலும் படிக்க | பண பரிவர்த்தனை செய்யும் போது கவனம் தேவை.. இல்லை என்றால் சிக்கல் தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ