நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி நாட்டின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டுக்காக பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே தங்கள் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் வழங்கத் தொடங்கியுள்ளன. இந்தப் பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான 2வது ஆட்சி காலத்தின் கடைசி முழுப் பட்ஜெட் என்பதால் அரசியல் ரீதியாகவும் இந்தப் பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் என்ன
இந்த 2023 ஆம் ஆண்டின் பட்ஜெட் தனிநபருக்கும் சரி, வர்த்தகத் துறைக்கும் சரி சாதகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ள 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் முக்கிய எதிர்பார்ப்புகள் என்னென்ன, சந்தைக்கான தேவைகள் என்ன என்பதை காணபோம்.


மேலும் படிக்க | Budget 2023: இந்தியாவின் வருமானத்திற்கான வழிகள் என்ன? ‘நாட்டு பட்ஜெட்’ வருவாய் வழிகள் 


வீட்டுக் கடன்
தற்போது வட்டி விகிதம் அதிகரித்துள்ளதால் சொந்த வீடு வாங்க திட்டமிடுவோருக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்த நிலையில் இச்சுமையைக் குறைக்கத் தற்போது பிரிவு 24 கீழ் 2 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வீட்டுக்கடன் வட்டி தொகை பேமெண்டிற்கு வரிச் சலுகை அளிக்கப்பட்டு உள்ளது. இதை 5 லட்சம் வரையில் அதிகரிக்கக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.


முன்னதாக 2022ல் வீட்டுத் துறை நன்றாக இருந்தது. அனாரோக் ரிசர்ச் அறிக்கையின்படி, 2021ம் ஆண்டை விட 2022ல் குடியிருப்பு சொத்து விற்பனை 50% அதிகரித்துள்ளது. இருப்பினும், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வீட்டுத் துறையைப் பொறுத்தவரை எல்லாமே சீராக இல்லை. இதற்கிடையில், 2023 பட்ஜெட்டில் வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் தரப்பிலிருந்து இந்தத் துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


NAREDCO கருத்து என்ன?
மறுபுறம் NAREDCO வழங்கிய பரிந்துரைகள், ரியல் எஸ்டேட் துறை முன்பை விட அதிக உற்பத்தி மற்றும் வேகமாக வளர முடியும் என்று கூறியுள்ளது. அரசாங்கம் சில விதிகள் மற்றும் வரிகளை ரத்து செய்தால். குறிப்பாக, வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு வட்டி மானியம் வழங்குவது மற்றும் மலிவு விலை வீடுகளுக்கு வேலை செய்யும் பில்டர்கள் மீதான வரிச்சுமையைக் குறைப்பது போன்றவை அடங்கும்.


ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களுக்கான தள்ளுபடிகள்
வருமான வரிச் சட்டத்தின் சில விதிகளில் மாற்றங்கள் மற்றும் சில பிரிவுகளை நீக்கவும் NAREDCO பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், இந்த அதிக மூலதன முதலீட்டுத் துறையுடன் இணைந்திருக்க விரும்பும் நிறுவனங்களும், தனிநபர்களும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தங்குமிடத்திலிருந்து வரும் வாடகை வருமானம் தொடர்பான வருமான வரிச் சட்டத்தின் 23(5) பிரிவை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Budget 2023: பல துறைகளில் பெரிய அறிவிப்புகள், வரி செலுத்துவோருக்கு நிவாரணம்!! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ