7வது ஊதியக்குழு: சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு 4 சதவிகிதம் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 46 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆறாவது மற்றும் ஐந்தாவது ஊதியக் குழுவின் படி சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு இப்போது பெரிய செய்தி வந்துள்ளது. இந்த ஊழியர்களின் அகவிலைப்படியை (Dearness Allowance) அரசு உயர்த்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

6th Pay Commission, 5th Pay Commission: அகவிலைபடி எவ்வளவு அதிகரித்துள்ளது? 


ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் (CPSE) ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் டிஏ (DA) தற்போதுள்ள 221% லிருந்து 230% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இம்முறை அகவிலைபப்டி 9 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அகவிலைப்படி விகிதம் ஜூலை 1, 2023 முதல் ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும். 


6வது ஊதியக் குழுவின்படி சமீபத்திய அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு எவ்வளவு சம்பளம் அதிகரிக்கும்?


அகவிலைப்படி உயர்வு என்பது அரசு ஊழியரின் அடிப்படை ஊதியத்தில் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை ஊதியம் மாதம் ரூ.43,000 என்று வைத்துக்கொள்வோம். அவர் 6வது ஊதியக்குழுவின்படி சம்பளம் வாங்குகிறார் என்று கருதலாம். 212% அகவிலைப்படியில் அதன் தொகை ரூ 91,160 ஆக இருக்கும். நவம்பர் 16, 2023 தேதியிட்ட அலுவலக குறிப்பாணையின்படி, டிஎ தற்போதுள்ள 212% இலிருந்து 230% ஆக அதிகரிக்கும். எனவே, திருத்தத்திற்குப் பிறகு, டிஏ தொகை ரூ.98,900 ஆக உயரும்.


டிஏ 15 சதவீதம் அதிகரித்துள்ளது


ஐந்தாவது ஊதியக் குழுவின் கீழ் உள்ள ஊழியர்களின் டிஏ -வும் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊழியர்களின் டிஏ இரண்டு பிரிவுகளின்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.


அடிப்படை சம்பளத்துடன் 50 சதவீத டிஏவை இணைக்கும் பலன் வழங்கப்படாத ஊழியர்களுக்கு, அகவிலைப்படி தற்போதைய 462% -இலிருந்து 477% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர, அடிப்படை சம்பளத்துடன் 50% டிஏவை இணைக்கும் பலன் கொடுக்கப்பட்டுள்ள ஊழியர்களுக்கு, அகவிலைப்படி தற்போதுள்ள டிஏ விகிதம் 412% இல் இருந்து 427% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், இருதரப்பு ஊழியர்களும் 15 சதவீத அகவிலைப்படி உயர்வின் பலனைப் பெறுகின்றனர்.


மேலும் படிக்க | பழைய ஓய்வூதியம்: மாநில அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான அப்டேட், மீண்டு ஓபிஎஸ், உத்தரவு வெளியானது!!


ஏழாவது ஊதியக் குழுவின் (7th Pay Commission) கீழ், அக்டோபர் மாதத்தில் மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி 4 சதவீதம் (DA Hike) உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் டிஏ 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்ந்தது. இந்த புதிய விகிதங்கள் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தன. அரசின் இந்த முடிவால் 49 லட்சம் மத்திய ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைந்துள்ளனர்.


ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் ஏற்றம்


மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) புத்தாண்டில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரில் (Fitment Factor) மாற்றம் வரக்கூடும் என்று கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்க, அரசு இந்த நடவடிக்கையை எடுக்கக்கூடும். ஃபிட்மெண்ட் ஃபாக்டர் தற்போதுள்ள 2.57 மடங்கிலிருந்து 3 மடங்காக உயரக்கூடும். 


பிற கொடுப்பனவுகளில் ஏற்றம்


மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் அகவிலைப்படி (DA), பயணப்படி (TA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), மருத்துவ செலவுகள் (Medical Reimbursement) போன்ற அலவன்ஸ்கள் அடங்கும். அகவிலைபப்டி அதிகரித்த பிறகு, பயணப்படியும் அதிகரிக்கப்படுகிறது. அகவிலைப்படி ஒரு குறிப்பிட்ட அளவை எட்டும்போது எச்ஆர்ஏ -விலும் அதிகரிப்பு ஏற்படுகின்றது. அனைத்து அலவன்சுகளையும் கணக்கில் கொண்டு ஒரு மத்திய ஊழியரின் மாதாந்திர CTC கணக்கிடப்படுகிறது. 


மேலும் படிக்க | அரியவகை நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கத் தொடங்கிய இந்தியா! அதிர்ச்சி தரும் மருந்து விலைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ