EPFO ​​சமீபத்திய அப்டேட்: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. இது அவர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாக இருக்கும். 6.5 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் இபிஎஃப்ஓ ​​மூலம் பயனடையப் போகிறார்கள். இபிஎஃப்ஓ, ஓய்வூதிய நிதியில் உச்சவரம்பு தொடர்பான முடிவை மிக விரைவில் எடுக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. PF இன் வரம்பிற்குள் அதிகமான மக்களைக் கொண்டுவர அரசாங்கம் விரும்புவதாக இபிஎஃப்ஓ தெரிவித்துள்ளது. இந்த திசையில், ஓய்வூதிய வரம்பை அடிப்படை சம்பளமான 15,000 ரூபாயில் இருந்து 21,000 ரூபாயாக உயர்த்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஃப்ஓ விதிகளின்படி, இபிஎஸ் ஓய்வூதியத்தில், அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.15 ஆயிரத்தில் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில், EPFO ​​ஓய்வூதிய நிதியில் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 1250 ரூபாய் டெபாசிட் செய்யலாம். இதில் மாற்றங்கள் செய்யப்பட்டால், இந்த வரம்பு ரூ.21,000 ஆக உயரும்.


சம்பள வரம்பு என்ன?


EPFO சந்தாதாரர் EPS க்கு பங்களிக்கும் போது, ​​அவரது EPF தவிர மற்றொரு தொகை EPFO-க்கு செல்கிறது. இவை முதலாளி மூலம் அளிக்கப்படும் பங்களிப்புகளாகும். ஆனால் இதில் டெபாசிட் மற்றும் ஓய்வூதிய நிதியின் அதிகபட்ச வரம்பு ரூ.15,000 ஆகும். இப்போது அதை EPFO ​​அதிகரிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஒரு உதாரணம் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். இபிஎஃப்ஓ -வில் பங்களிக்கும் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ. 30 ஆயிரம் என்றால், அந்த சம்பளத்தில் 12 சதவீதம் EPS டெபாசிட் செய்யப்படுகிறது. இது மட்டுமல்லாமல், அதே பங்கு முதலாளியின் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆனால் முதலாளியின் பங்கு EPFO ​​இல் இரண்டு இடங்களில் டெபாசிட் செய்யப்படுகிறது. முதலாவது EPF இல் டெபாசிட் செய்யப்படுகிறது, இரண்டாவது EPS இல் டெபாசிட் செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | PF சந்தாதாரர்களுக்கு அடிச்சுது லாட்டரி: வருகிறது வட்டி பணம்.. செக் செய்வது எப்படி?


இத்தனை ஆயிரம் ரூபாய் கணக்கில் வரும்


EPFO இன் 12 சதவீதம் சம்பளம் 30,000 ரூபாயில் இருந்து டெபாசிட் செய்யப்பட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஓய்வூதிய நிதியில் அடிப்படை சம்பள வரம்பு ரூ.15 ஆயிரம் ஆகும். EPFO வரம்பு காரணமாக, சம்பளத்தில் 8.33 சதவீதம் அதாவது ரூ.1250 EPF-ல் டெபாசிட் செய்யப்படுகிறது. அதன் வரம்பு அதிகரித்தால் அந்த பகுதிக்கு ரூ.25 ஆயிரம் வரை வரம்பு நிர்ணயிக்கப்படலாம். அதாவது ஓய்வூதிய நிதியில் ரூ.2,083 டெபாசிட் செய்யப்படும்.


சந்தாதாரர்கள் பம்பர் நன்மைகளைப் பெறுவார்கள்


EPFO இந்த முடிவை எடுத்தால், 6 கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்கள் பம்பர் பலன்களைப் பெறுவார்கள். இதில் அதிகமானோர் இந்த எல்லைக்குள் வருவார்கள். எனினும், உங்கள் முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பு இருந்தால், இந்த விதியை நடைமுறைப்படுத்துவதற்கு நேரம் ஆகலாம்.


இபிஎஃப்ஓ என்றால் என்ன?


ஓய்வூதியத்திற்கான திட்டமிடல் மற்றும் நிதி பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்தியாவில் ஓய்வூதியத்திற்காக சேமிப்பதில் முக்கிய வழிகளில் ஒன்று "பணியாளர் வருங்கால வைப்பு நிதி' (EPF) ஆகும். அரசாங்கச் சேமிப்புத் திட்டமான இது, ஊழியர்கள் தங்கள் பணி ஆண்டுகளை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தவும், வசதியான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் ஓய்வூதிய திட்டங்களை நிர்வகிக்கிறது. இபிஎஃப்ஓ அவ்வப்போது பல வித புதுப்பிப்புகளை தனது சந்தாதாரர்களுக்கு வழங்குகிறது.


உங்களின் EPF கணக்கு இருப்பை பற்றிய முக்கியத்துவத்தை உணர்ந்து, EPFO (பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) பணியாளர்கள் தங்கள் EPF இருப்பை ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் சரிபார்க்க பல வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | EPFO மெகா அப்டேட்: வருகிறது வட்டி தொகை.. PF Balance செக் செய்வது எப்படி? இதோ விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ