EPS Minimum Monthly Pension: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO ஆல் நிர்வகிக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதியில் மாதா மாதம் பங்களிக்கும் பிஎஃப் உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தின் (EPS) கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாளை, அதாவது ஜூலை 31 ஆம் தேதி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

EPS 95: இபிஎஸ்-95 தேசியப் போராட்டக் குழு


குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் (Minimum Monthly Pension) மட்டுமல்லாமல் இன்னும் பல்வேறு கோரிக்கைகளையும் இந்த போராட்டம் மூலம் வலியுறுத்த திட்டம் உள்ளது. இபிஎஸ்-95 தேசியப் போராட்டக் குழுவின் தலைவர் கமாண்டர் அசோக் ரவுத், திங்கள்கிழமை இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ‘நீண்ட காலமாக வழக்கமான ஓய்வூதிய நிதியில் பங்களித்தாலும், ஓய்வூதியதாரர்கள் மிகக் குறைந்த ஓய்வூதியத்தையே பெறுகிறார்கள். இந்த குறைந்த ஓய்வூதியத்தை (Pension) வைத்துக்கொண்டு பலரால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. நாடு முழுவதும் கடந்த 8 ஆண்டுகளாக 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்தக் கோரியும், அவர்களின் கோரிக்கைகளை அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை’ என்று கூறினார்.


EPS 95 என்றால் என்ன?


பணியாளர்கள் மாதா மாதம் தங்கள் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 12% -ஐ இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கிறது. ஊழியர்கள் டெபாசிட் செய்யும் தொகை இபிஎஃப் கணக்கில் செல்கிறது. நிறுவனம் / முதலாளி டெபாசிட் செய்யும் தொகையில் 8.33 சதவீதம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்கும் (EPS), மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் -க்கும் செல்கிறது. இது தவிர ஓய்வூதிய நிதிக்கு அரசும் 1.16 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.


மேலும் படிக்க | ITR Filing காலக்கெடு நீட்டிக்கப்படுமா? வரி செலுத்துவோர் இதை கோர காரணம் என்ன?


தற்போது மாதந்தோறும் 1450 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது


- தற்போது ஓய்வூதியம் பெறுவோர் சராசரி மாத ஓய்வூதியமாக வெறும் ரூ.1,450 -ஐ பெற்று வருகின்றனர். 
- அகவிலைப்படியுடன் அடிப்படை ஓய்வூதியத்தை மாதந்தோறும் 7,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஊழியர்கள் சார்பில் நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது.


- இது தவிர, ஓய்வூதியர்களின் வாழ்க்கைத் துணைக்கு (கணவர் அல்லது மனைவி) இலவச சுகாதார வசதிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. 


- இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை ஓய்வூதியதாரர்கள் முன்வைத்து வருகின்றனர். 


இந்த பிரச்சனைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் இரண்டு முறை பேசியும், நிதியமைச்சர் மற்றும் தொழிலாளர் துறை அமைச்சரிடம் பேசியும் இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று ராவத் கூறினார். இதனால், ஓய்வூதியதாரர்கள் மத்தியில் ஏமாற்றம் அதிகரித்துள்ளது. இது குறித்து மிகவும் தீவிரமாக பேசிய அவர், ‘இனி எங்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வரும் அரசியல் கட்சிகளை ஆதரிப்போம். எங்கள் போராட்டம் தொடரும்.’ என்று கூறினார்.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)


அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் டிஏ ஹைக், அதிரடி ஊதிய உயர்வு: இந்த நாளில் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ