EPFO Update: ஓய்வூதிய நிதி மேலாளர் EPFO இன் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் 1995 (EPS-95) இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் தங்களது குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.7,500 ஆக உயர்த்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக செவ்வாயன்று அச்சுறுத்தியுள்ளனர். தற்போது, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) EPS-95 இன் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், செப்டம்பர் 2014 இல் நடைமுறைப்படுத்தப்பட்ட விதிகளின்படி, குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக (உரிமை) ரூ. 1,000 பெறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"குறைந்தபட்ச ஓய்வூதியத்தை (Minimum Pension) மாதம் ரூ.7,500 ஆக உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை கோரி, தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இபிஎஸ்-95-ன் தேசிய போராட்டக் குழு தலைமையில் ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) இரண்டாவது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கவுள்ளனர்." என கமிட்டி செவ்வாய்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய தொழிலாளர் துறை (Labour Ministry) அமைச்சர் பூபேந்தர் யாதவ் உறுதியளித்த போதிலும், அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று குழு தெரிவித்துள்ளது.


கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஜனவரி 31-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என ஓய்வூதியர்கள் தெரிவித்தனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்க உள்ளனர். கமிட்டி தலைவர் அசோக் ராவத், "இது எங்களின் இறுதி எச்சரிக்கை. பலமுறை உறுதி அளித்தும், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம். அதற்கு முன், அரசு ஜனவரி 31 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் / ஆர்ப்பாட்டம் தொடங்கும்." என்று கூறினார்.


இதுதொடர்பாக தொழிலாளர் துறை அமைச்சர் பலமுறை உறுதியளித்து வருவதாகவும், பிரதமரும் இரண்டு முறை உறுதி அளித்தும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சர் பலமுறை உறுதியளித்த போதிலும், EPFO இதைப் பற்றி தீவிரமாக இல்லை என்று கூறப்படுகின்றது.


மேலும் படிக்க | Med Tech: வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்புடன் மருத்துவ தொழில்நுட்பத்தில் முன்னேறத் துடிக்கும் இந்தியா


தற்போதுள்ள விதிமுறைகளின்படி, இபிஎஸ்-95ன் கீழ் உள்ள ஒரு ஊழியரின் (Employee) அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் வருங்கால வைப்பு நிதிக்கு செல்கிறது. அதே நேரத்தில் முதலாளியின் பங்கில் 8.33 சதவீதம் ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கு செல்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு பணியாளரின் ஓய்வூதிய நிதியிலும் 1.16 சதவீதத்தை அரசாங்கம் வழங்குகிறது. "முப்பது வருடங்களாக வேலை செய்து, இபிஎஸ் அடிப்படையிலான ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்ந்து பங்களித்து வந்தாலும், ஊழியர்கள் மாதாந்திர ஓய்வூதியமாக மிகக் குறைந்த தொகையைப் பெறுகிறார்கள். இதனால் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தங்கள் அன்றாட செலவை ஈடுசெய்வது கடினமாக உள்ளது" என்று ராவுத் கூறினார்.


நாட்டில் 78 லட்சம் ஓய்வூதியதாரர்கள் இருப்பதாக EPFO டேஷ்போர்டு காட்டுகிறது.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)


அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது.


மேலும் படிக்க | பட்ஜெட் 2024... மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட், பல சலுகைகளை பெறலாம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ