பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் விவசாயிகளின் நிதியுதவிக்காக மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 31 தேதி அன்று வெளியிட்டார். அதன்படி இந்தத் திட்டத்தின் 12வது தவணையை எந்த இடையூறும் இன்று பெற வேண்டுமானால் உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா இருக்கப்பட வேண்டும். இல்லையெனில் 12வது தவணை பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். இதற்கான கடைசி தேதியை அரசாங்கம் 31 ஜூலை 2022 வரை நீட்டித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்தத் தொகை ரூ.2,000 வீதம் என்று மூன்று தவணைகளாக கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான விவசாயிகள் இத்திட்டத்தின் மூலம் பயனடைகின்றனர். இதற்கான அடுத்த தவணையை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்களும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, அடுத்த தவணைக்காகக் காத்திருந்தால், உங்கள் இ-கேஒய்சி ஐ காலக்கெடுவிற்குள் முன்பே அப்டேட் செய்ய வேண்டும். எனவே இது தொடர்பான விரிவான தகவளை நீங்கள் பிரதம மந்திரி கிசான் போர்டல் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


பட்டியலில் உள்ள பெயரை இப்படி பார்க்கவும்
இந்த நிலையில் பட்டியலில் உள்ள உங்கள் பெயர்களைச் சரிபார்க்க, பிரதம மந்திரி கிசான் யோஜனா மூலம் பயன்பெறும் விவசாயிகள் முதலில் பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://pmkisan.gov.in/ க்குச் செல்ல வேண்டும். இங்கே விவசாயிகள் கார்னர் என்ற விருப்பம் தோன்றும். அதன் பிறகு பயனாளிகள் பட்டியல் என்ற விருப்பத்தில் புதிய பக்கம் திறக்கும். புதிய பக்கத்தில், உங்கள் மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராம விவரங்களை உள்ளிடவும். அதன் பிறகு கேட் அறிக்கைக்குச் செல்லவும். இங்கே நீங்கள் அனைத்து விவசாயிகளின் பட்டியலைப் பெறுவீர்கள். இதில் உங்கள் பெயரைச் சரிபார்க்கலாம்.


மேலும் படிக்க | SBI அற்புதமான சலுகை, ஷாப்பிங் செய்து 70% தள்ளுபடி பெறுங்கள் 


ஆன்லைனில் புதுப்பிக்கவும்
* பிரதம கிசானின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
* வலது பக்கத்தில் கிடைக்கும் இ-கேஒய்சி விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* ஆதார் அட்டை எண், கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு தேடலைக் கிளிக் செய்யவும்.
* ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்.
* இப்போது ஓடிபி பெறவும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் பெறப்பட்ட ஓடிபி ஐ உள்ளிடவும். இதன் மூலம் கேஒய்சி புதுப்பிக்கப்படும்.


மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR