DA Hike For Central Government Employees: தீபாவளிக்கு முன்னர் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (Dear Allowance) பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3 சதவீதம் உயர்த்தி வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், தீபாவளிக்கு முன்னர் ஊழியர்களுக்கு இனிப்பான செய்தியை மத்திய அரசு வழங்க இருப்பதாக தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீபாவளி பண்டிகை வரும் அக்.31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் என கொண்டாட்டம் குதூகலம் நிறைந்திருக்கும் வேளையில், தங்களுக்கு போனஸ் வழங்கப்படுமா என தனியார் துறை ஊழியர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களும் ஆவலோடு காத்திருப்பார்கள். 


அமைச்சரவையில் அறிவிப்பு வரும்?


அந்த வகையில், அவர்களுக்கு மேலும் மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அகவிலைப்படி அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகைக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அந்த கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து முடிவு இறுதி செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | EPFO அதிரடி: தீபாவளிக்கு முன் போனஸாக 2 மாத சம்பளம், ஊழியர்கள் ஹேப்பி.. முமு விவரம் இதோ


கடந்த அக். 9ஆம் தேதியும் மத்திய அமைச்சரவை கூடியது. அப்போதே அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பாக்கப்பட்டது. இருப்பினும், தீபாவளி பண்டிகையை நெருங்கும்போதே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.


டிஏ 53% ஆக உயர்வு


மத்திய அரசு ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் முதல் 50 சதவீத டிஏ-வை பெற்று வருகின்றனர். தற்போது அடுத்த அறிவிப்பில் 3 சதவீதம் உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி உயர்த்தப்படும்பட்சத்தில் டிஏ 53% ஆக மாறும். AICPI குறியீட்டின்படி, 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மொத்த அகவிலைப்படி 53.36 சதவீதத்தை எட்டியுள்ளதாக தெரிகிறது. அந்த வகையில், அரசு அந்த 3 சதவீதத்தை மட்டும் உயர்த்த திட்டமிடும் என கூறப்படுகிறது.


மத்திய அரசின் லெவல் - 1 ஊழியர்களுக்கு 7ஆவது ஊதியக்குழுவின்படி, ரூ.18 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரத்து 900 வரை அடிப்படை ஊதியமாக வழங்கப்படுகிறது. இதை வைத்து பார்த்தால், தற்போது குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரத்தை அடிப்படை ஊதியமாக பெறுபவர்களுக்கு 53% டிஏ மூலம் மொத்தம் சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்பதையும், அதிகபட்சமாக ரூ.56 ஆயிரத்து 900 வாங்குபவர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதையும் இங்கு காணலாம்.


கூடுதலாக எவ்வளவு கிடைக்கும்? 


ரூ.18 ஆயிரம் அடிப்படை ஊதியம் வாங்குபவர்களுக்கு தற்போதைய 50% என்பது ஒரு மாதத்திற்கு 9,000 ரூபாய் கிடைக்கும். அதே நேரத்தில் தற்போது 53% என்பது ஒரு மாதத்திற்கு 9,540 ரூபாய் கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் 540 ரூபாய் கூடுதலாக கிடைக்கும். அந்த வகையில், 6 மாத ஊதியத்தில் கூடுதலாக மொத்தம் ரூ.3240 கிடைக்கும். 


அதேபோல், அடிப்படை ஊதியமாக 56 ஆயிரத்து 900 ரூபாயை வாங்கும் ஊழியர்கள் தற்போது 50% டிஏ மூலம் 28 ஆயிரத்து 450 ரூபாய் வாங்குகிறார். 53% ஆக டிஏ உயர்த்தப்பட்டால் 30 ஆயிரத்து 157 ரூபாய் கிடைக்கும். அதாவது 1,707 ரூபாய் அதிகமாக கிடைக்கும். அந்த வகையில் 6 மாத ஊதியத்தில் கூடுதலாக ரூ.10 ஆயிரத்து 242 கிடைக்கும்.


மேலும் படிக்க | NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ