Central Government Pensioners Latest News: மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை, ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு சாதகமான ஒரு குறிப்பிடத்தக்க புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. பணியாளர், முதுநிலை மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ குறிப்பாணையில், 80 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற ஊழியர்கள் இப்போது கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவுக்கு தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. CCS (ஓய்வூதியம்) விதிகள், 2021 இன் விதி 44 இன் துணை விதி 6 இன் விதிகளின்படி இந்தப் புதுப்பிப்பு வதுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதிப் பாதுகாப்பு வழங்க வயது அடிப்படையில் வழங்கப்படும் மேம்படுத்தப்பட்ட ஓய்வூதியப் பலன்கள்


ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நிதி சவால்களை அங்கீகரிக்கும் வழியில், 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்களுக்கு அடுக்கு வாரியான கூடுதல் ஓய்வூதிய பலன்களை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. மூத்த குடிமக்களுக்கு அவர்களது முதுமையில் போதுமான நிதி பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமகும். புதிதாக அறிவிக்கப்பட்ட பலன்களின் விவரம் கீழ்வருமாறு:


- 80 முதல் 85 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு: அடிப்படை ஓய்வூதியம்/கருணைக் கொடுப்பனவில் 20%
- 85 முதல் 90 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு: அடிப்படை ஓய்வூதியம்/கருணைக் கொடுப்பனவில் 30%
- 90 முதல் 95 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு: அடிப்படை ஓய்வூதியம்/கருணைக் கொடுப்பனவில் 40%
- 95 முதல் 100 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு: அடிப்படை ஓய்வூதியம்/கருணைக் கொடுப்பனவில் 50%
- 100 வயது அல்லது அதற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களுக்கு: அடிப்படை ஓய்வூதியம்/கருணைக் கொடுப்பனவுவில் 100% 


கூடுதல் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுவதற்கான தகுதி என்ன?


- ஓய்வூதியம் பெறுபவர் குறிப்பிட்ட வயதை அடையும் காலண்டர் மாதத்தின் முதல் நாளிலிருந்து கூடுதல் ஓய்வூதியம் அல்லது கருணைக் கொடுப்பனவு செலுத்தப்படும். 
- உதாரணமாக, ஆகஸ்ட் 20, 1942 இல் பிறந்த ஓய்வூதியதாரர், ஆகஸ்ட் 1, 2022 முதல் கூடுதல் 20% ஓய்வூதியத்திற்குத் தகுதி பெறுவார். 
- மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான இந்த கூடுதல் ஓய்வூதியத் திட்ட அட்டவணையானது, பொதுவாக தொடர்ந்து அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவை நிர்வகிக்க உதவும்.


ஓய்வூதிய இணக்கத் தேவைகள்: இணக்கத்தை உறுதி செய்ய துறைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன


இந்த புதுப்பிக்கப்பட்ட விதிகள் திறம்பட செயல்படுத்தப்படுவதை வங்கிகள் உட்பட ஓய்வூதியம் வழங்கும் அமைப்புகள், அனைத்து அமைச்சகங்கள், திணைக்களங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பாணை மேலும் கேட்டுக்கொண்டுள்ளது. ஓய்வுபெற்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு, கூடுதல் கொடுப்பனவு தொடர்பான ஏதேனும் சந்தெகங்கள் இருந்தால், அவற்றை தெளிவுபடுத்திக்கொள்ள தங்களுக்குத் தேவையான ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் குட் நியூஸ்: 8வது ஊதியக்குழு அறிவிப்பு... அதிரடி ஊதிய உயர்வு


ஓய்வூதியதாரர்களின் நிதி ஆதரவுக்கான நடவடிக்கை


மூத்த குடிமக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் அவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக அதிக வயதுடைய ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய பலன்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரச் செலவுகள் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதால், இத்தகைய முன்முயற்சியானது அதிக வயதுடைய ஓய்வூதியதாரர்களது உடல்நலம் மற்றும் வாழ்க்கைச் செலவுகளுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கும்.


முக்கிய சிறப்பம்சங்கள்


- 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் இப்போது அவர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20% முதல் 100% வரை கூடுதல் சலுகைகளைப் பெறுவார்கள்.


- ஓய்வூதியம் பெறுபவர் குறிப்பிட்ட வயதை அடையும் மாதத்தின் முதல் நாளிலிருந்து இந்த பலன்கள் தொடங்கும்.


- ஓய்வூதியம் விநியோகிக்கும் அனைத்து அமைப்புகள் மற்றும் அமைச்சகங்களும் இந்த வழிகாட்டுதல்களுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும். 


(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக எழுதப்படுள்ளது. மேலும் விவரங்களுக்கு, ஓய்வுபெற்ற ஊழியர்கள், தொடர்புடைய ஓய்வூதியம் வழங்கும் துறைகளைத் தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.)


மேலும் படிக்க | Leasehold Property வாங்கியுள்ளீர்கள்ளா? லீஸ் காலம் முடிந்தவுடன் வீட்டை காலி செய்ய வேண்டுமா? விதிகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ