தொல்லைதரும் அழைப்புகள் மற்றும் நிதி மோசடிகளை சமாளிக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளின் (Online fraud) வழக்குகளை தடுக்க அரசாங்கம் பெரிய நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது. டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் அதிகரித்து வரும் வணிக மற்றும் பரிவர்த்தனைகளுக்கு மத்தியில் மோசடிகள் (Financial fraud) மற்றும் கோரப்படாத அழைப்புகள் ஏற்படுவதைத் தடுக்க டிஜிட்டல் புலனாய்வுப் பிரிவை (digital intelligence unit) அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் (Ravi Shankar Prasad) தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அரசாங்கம் விரைவில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடனும், டெலிமார்க்கெட்டருடனும் ஒரு சந்திப்பை நடத்தும் என்பதையும் தெரிவித்துள்ளது. 


இதற்கென ஒரு வலைத்தளம் அமைக்கப்படும்


மோசடி மேலாண்மை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் போர்டல் (Website) செய்யப்படும். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் கோரப்படாத அழைப்புகள், SMS மற்றும் நிதி மோசடி குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு புகார் அளிக்க முடியும். இதன் கீழ், வாடிக்கையாளர்களுக்கு கோரப்படாத வணிக அழைப்புகள் அல்லது SMS அனுப்பும் நிறுவனங்களுக்கு அபராதம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


ALSO READ | உங்க வங்கி கணக்கில் உடனே இதை செய்யுங்கள், இல்லையெனில் கணக்கு முடங்கக்கூடும்.!


இது குறித்து பதிவாகும் வழக்குகளுக்கு உரிய நேரத்தில் தீர்வு


அமைக்கப்பட்டிருக்கும் அலகு, நிதி மோசடி வழக்குகளை உரிய நேரத்தில் விசாரணை செய்ய இது உதவும். இந்த கூட்டத்தில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பதில் அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் தொலைத்தொடர்பு செயலாளர், தொலைத்தொடர்பு உறுப்பினர் மற்றும் DTG அணுகல் சேவை ஆகியோர் கலந்து கொண்டனர்.


கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்


மோசடி செய்பவர்கள் யாரிடமிருந்தும் பணம் பறிக்க அனுமதிக்கக்கூடாது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிதி மோசடிக்கு தொலைத்தொடர்பு கருவிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். அவர்கள் மூலமாக, சாமானியர்களின் கடின உழைப்பு பணம் பறிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறுகளைத் தடுக்க கடுமையான தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.


DND-க்கு பிறகும் வரும் அழைப்புகள்


TRAI-யின் முயற்சிகள் இருந்தபோதிலும், கோரப்படாத அழைப்புகள் நிறுத்தப்படவில்லை. அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில், வணிக அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டது. வாடிக்கையாளர்கள் DND-யில் (Do-Not-Disturb) பதிவு செய்திருந்தாலும், வணிக அழைப்புகள் மற்றும் SMS தொடர்ந்து அதே எண்ணிலிருந்து வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR