கொரோனா முழு அடைப்புக்கு மத்தியில் HDFC வங்கி நாடு முழுவதும் மொபைல் ATM-களுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த வசதியால், வாடிக்கையாளர்கள் இப்போது தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் ATM வேனில் இருந்து பணத்தை எடுக்க முடியும். இது தவிர, வங்கி கடனுக்கான வட்டியை 0.20 சதவீதம் குறைத்துள்ளது. கடன்களின் விலை குறைக்கப்பட்டதால் வங்கி வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. வங்கியின் வலைத்தளத்தின்படி, செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து கால கடன்களுக்கும் நிதியின் விளிம்பு செலவு அடிப்படையிலான வட்டி விகிதம் (MCLR) மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது.


இந்த மாற்றத்திற்குப் பிறகு ஒரு நாளைக்கு MCLR 7.60 சதவீதமாகவும், ஒரு வருட கடன் 7.95 சதவீதமாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான கடன்கள் ஒரு வருட MCLR உடன் இணைக்கப்பட்டுள்ளன. MCLR மூன்று ஆண்டு கடனில் 8.15 சதவீதமாக இருக்கும். புதிய கட்டணங்கள் ஏப்ரல் 7 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.


இந்த புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 முதல் பொருந்தும் எனவும், MCLR அடிப்படையிலான வட்டி விகிதத்தில் 0.35% குறைப்பு இருப்பதாகவும் வங்கி அறிவித்தது. மேலும், சேமிப்பு கணக்கு வைப்புகளுக்கான வட்டி விகிதத்தை வங்கி 0.25 சதவீதம் குறைத்து 2.75 சதவீதமாகக் குறைத்துள்ளது. 


புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும், அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்க, பணத்தை எடுக்க மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் இந்த HDFC  வங்கி இந்த வசதியைத் தொடங்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. 


மொபைல் ATM ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கிடைக்கும். இந்த காலகட்டத்தில், மொபைல் ATM காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 3-5 இடங்களில் நிறுத்தப்படும். தற்போது சோதனையில் உள்ள இந்த செயல்முறை விரைவில் விரிவாக்கப்படும் எனவும் வங்கி அறிவிப்பு குறிப்பிட்டுள்ளது.