கடன் வாங்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை. ஆனால், நம்மில் பொதுவாக அனைவருக்கும், ஏதோ ஒரு காலகட்டத்தில் கடன் வாங்கும் சூழ்நிலை நிச்சயம் ஏற்படுகிறது. அது குழந்தைகளின் படிப்புக்கான செலவை சமாளிப்பதற்காக இருக்கலாம். புதிய வீடு அல்லது வாகனம் வாங்குவதற்காக இருக்கலாம். அல்லது தனிப்பட்ட ஏதோ ஒரு காரணத்திற்காக இருக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடன் வாங்க வங்கிகளை அணுகும் போது, வங்கிகள் எதிர்பார்க்கும் முக்கிய விஷயம் சிறந்த கிரெடிட் ஸ்கோர் ஆகும். சிபில் ஸ்கோர் என்னும் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் வங்கி கடன் எளிதில் கிடைக்கும். அதோடு வட்டி விகிதமும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருக்கும். அதனால் சிறந்த கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது மிகவும் முக்கியம்.


சிறந்த கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் ஒரு முக்கிய விஷயம் கிரெடிட் கார்டு பயன்பாடுகள். இப்போது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது மிகவும் பொதுவான விஷயமாகிவிட்டது. இது பல விதங்களில் மிகவும் சௌரியமாக இருக்கிறது. பொருட்களை இஎம் ஐ மூலமாக வாங்கவும், சரியான நேரத்தில் கட்டணங்களை செலுத்தவும், என மிக சவுகரியமாக கிடைக்கும் கடன் வசதி என்னலாம்.


எனினும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. சரியாக பயன்படுத்தாவிட்டால் அதுவே பெரும் சிக்கலை ஏற்படுத்தும். சரியான நேரத்தில் நிலுவைத் தொகையை திருப்ப செலுத்துவது மிக மிக முக்கியம். இல்லையென்றால் அபராதம் பன்மடங்காக விதிக்கப்படுவதோடு, வட்டிக்கு வட்டி என நாம் பெரும் தொகை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.


கிரெடிட் கார்டை சரியான வகையில் பயன்படுத்தினால் நமக்கு சிக்கல் ஏற்படாது என்பதோடு, அதிலிருந்து பல ஆதாரங்களை பெறலாம். கிரெடிட் லிமிட் இருக்கிறதே என்று கண்டபடி செலவு செய்யக்கூடாது. நமது லிமிட்டில் கிரெடிட் லிமிட் இன்னும் கடன் வரம்பில் 50% மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று  உங்களுக்கு நீங்களேஎ நிபந்தனை விதித்துக் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 4% DA ஹைக், ஜாக்பாட் சம்பள உயர்வு


கிரெடிட் கார்ட் பயன்பாட்டை கட்டுப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் ஒன்றில் கடன் வரம்பு இல்லை என்றால், நம்மிடம் உள்ள இரண்டாவது கார்டை பயன்படுத்தி வாங்கும் போக்கு நம்மை பிரச்சினைகளில் தள்ளிவிடும்.


கிரெடிட் கார்டை பயன்படுத்துவது என்பது கடன் வாங்குவது போன்றது என்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். கடன் வாங்கினால் ஆவது ஒரு குறிப்பிட்ட அளவு வட்டி செலுத்துவோம். ஆனால் கிரெடிட் கார்டில் வட்டிக்கு வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதை அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.


சலுகைகள் கிடைக்கிறது என்பதற்காக கிரெடிட் கார்டை பயன்படுத்துவது அது அல்ல. சலுகைகளுக்காக தேவையற்ற பொருட்களை வாங்கும் போது, நமக்கு நஷ்டமே மிஞ்சும். நமது கடன் நிலுவைத் தொகையும் அதிகரிக்கும். பின்னர் நிலுவைத் தொகையை கட்ட முடியாமல் போனால் சிக்கலில் சிக்க நேரிடலாம். 


மேலே கூறிய விஷயங்களை கருத்தில் கொண்டு, கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், நமது சிபில் ஸ்கோர் சிறிதளவும் பாதிக்கப்படாது. இதனால் அவசர காலங்களில் கடன் வாங்கும் போதும், வீட்டுக் கடன் வாகன கடன் போன்றவை வாங்க கடன் விண்ணப்பம் செய்யும் போதும் நமக்கு எளிதாக கடன் கிடைக்கும் என்பதோடு குறைந்த வட்டியில் கடனை பெற்று பயனடையலாம்.


மேலும் படிக்க | பங்குச்சந்தையில் பீதியை கிளப்பிய Paytm பங்குகள்: பதற்றத்தில் வாடிக்கையாளர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ