Indian Railways Refund Rules : இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடிகிறது. அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும். அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வேயில் தினம்தோறும் சுமார் 2.5 கோடி பேர் பயணம் செய்கிறார்கள், ஆனால் சில சயங்களில் பல்வேறு காரணங்களால் பல ரயில்கள் தாமதமாக அல்லது ரத்து செய்யப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், இந்திய ரயில்வே தற்போது பயணிகளுக்கு ஒரு சிறப்பான வசதியை வழங்குகிறது, அதன்படி இனி இந்த வசதியின் கீழ் பயணிகள் ரயில் டிக்கெட்டில் முழு பணத்தையும் அதாவது முழுமையான ரீஃபண்ட் பணத்தை திரும்பப் பெற முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியன் ரயில்வேயின் இந்த விதியைப் பற்றி பல பயணிகளுக்கு தெரியாது. அத்தகைய சூழ்நிலையில் இனி உங்களது ரயில் (Indian Railway) தாமதமானால் நீங்கள் இனி எந்த காலையுமின்றி முழுத் கட்டண தொகையையும் இந்திய ரயில்வே தரப்பில் இருந்து பெறுவீர்கள். இதற்கு இந்திய ரயில்வே சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அவை என்ன என்பதை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.


பயணிகள் பணத்தை எப்போது திரும்பப் பெறுவார்கள்?
நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். தற்போது பல்வேறு காரணங்களால் பல ரயில்கள் தாமதமாகவும் இயக்கப்படுகின்றன. இதனால் பல பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.


மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை தரும் அட்டைப்பெட்டி தயாரிக்கும் தொழில்!


இந்நிலையில் நீங்களும் ரயிலில் பயணிக்கப் போகிறீர்கள் மற்றும் உங்களது ரயில் தாமதமாக வந்தால், உங்கள் ரயில் டிக்கெட்டின் முழுப் பணத்தையும் அதாவது முழு ரீஃபண்ட் பணத்தையும் நீங்கள் எளிதாகத் திரும்பப் பெறலாம். எனினும் இந்த ரயில் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்தால் மட்டுமே பயணிகள் பணத்தைத் திரும்பப் பெற முடியும். பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு நீங்கள் டிக்கெட் டெபாசிட் ரசீதை தாக்கல் செய்ய வேண்டும். ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று TDRஐப் (Ticket Deposit Receipt) பதிவு செய்யலாம்.


இது தவிர, டிக்கெட் கவுண்டருக்குச் சென்று டிக்கெட்டை ஒப்படைத்தால், நீங்கள் முழு பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். இதனிடையே ஆன்லைனில் ரீஃபண்ட் பெற முதலில் IRCTC இணையதளத்தில் உள்நுழைய வேண்டும். இதற்குப் பிறகு, 'சேவைகள்' தாவலில் "கோப்பு டிக்கெட் டெபாசிட் ரசீது (TDR)" என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். இப்போது எனது பரிவர்த்தனைகளுக்குச் சென்று "TDR கோப்பு" என்பதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, உங்கள் கோரிக்கையானது ரயில்வே துறைக்கு அனுப்பப்படும். டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட அதே வங்கிக் கணக்கில் பணத்தைத் திரும்பப்பெறும் கட்டண தொகை திரும்பிப் அனுப்பப்படும். 


இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்புத்திட்டம்! மகன்களுக்கான சூப்பர் சேமிப்புத் திட்டம் எது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ