Indian Railways Ticket Price Rules: இந்தியாவில் ரயில்வே நெட்வொர்க் மிகவும் பெரியது. தினமும் கோடிக்கணக்கான மக்கள் இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் விமானம் டாக்ஸி போன்று போக்குவரத்து வசதிகளை விட ரயிலில் பயணிப்பது மக்களுக்கு சவுகரியமாக இருப்பதாக கருதுகின்றனர். இரண்டாவது காரணம் ரயில் கட்டணம் குறைவு, அதுமட்டுமின்றி ரயிலில் நாம் பாதுகாப்பாகவும் வேகமாகவும் பயணிக்க முடிகிறது. அதேசமயம் பேருந்துகளில் இல்லாத பல வசதிகள் ரயில்களில் உள்ளன உதாரணமாக கழிப்பறைகள் தொடங்கி படுக்கை வசதி வரை பல வசதிகள் இதில் அடங்கும். அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வேயில் தினம்தோறும் சுமார் 2.5 கோடி பேர் பயணம் செய்கிறார்கள், ஆனால் ரயில்வே சில பயணிகளின் டிக்கெட்டுகளில் 50 சதவீதத்த கட்டண தள்ளுபடியை வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்த வசதி யாருக்கு கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜெனரல், ஸ்லீப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் 75% வரை தள்ளுபடி:
இந்நிலையில் தற்போது மாற்றுத்திறனாளிகள், மனநலம் குன்றியவர்கள் மற்றும் முற்றிலும் பார்வையற்றோர் உதவியின்றி ரயிலில் பயணிக்க முடியாத பயணிகளுக்கு ரயில் டிக்கெட்டுகளில் தற்போது தள்ளுபடி வழங்கப்படுகிறது. அத்தகைய பயணிகளுக்கு பொதுவாக, ஸ்லீப்பர் மற்றும் மூன்றாம் ஏசியில் 75 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதேசமயம் இரண்டாவது மற்றும் முதல் ஏசியில் 50 சதவீதம் வரை டிக்கெட்டில் தள்ளுபடி வழங்கப்படும். அத்தகைய நபருடன் செல்லும் எஸ்கார்ட் ரயில் டிக்கெட்டுகளில் (IRCTC) அதே தள்ளுபடியைப் பெறுகிறது. பேச்சு மற்றும் காது கேளாதவர்களுக்கு ரயில் டிக்கெட்டில் 50 சதவீதம் சலுகை உண்டு. அத்தகைய நபருடன் செல்லும் எஸ்கார்ட் ரயில் டிக்கெட்டுகளில் அதே தள்ளுபடியைப் பெறுகிறது.


மேலும் படிக்க | Credit Card: கிரெடிட் கார்ட் பயனர்கள் கவனத்திற்கு! இந்த தவறுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்!


அதேசமயம் இந்த பயணிகள் ராஜ்தானி மற்றும் சதாப்தி போன்ற ரயில்களில் பயணம் செய்தால், அனைத்து வகையான டிக்கெட்டுகளிலும் 25% தள்ளுபடியை பெறுவார்கள். 


இந்த பயணிகளுக்கு ரயில் டிக்கெட் விலையில் நிவாரணம் கிடைக்கும்:
மறுபுறம் புற்றுநோய், தலசீமியா, இதய நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், ஹீமோபிலியா நோயாளிகள், காசநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், ஆஸ்டோமி நோயாளிகள், இரத்த சோகை, அப்லாஸ்டிக் அனீமியா நோயாளிகளுக்கும் ரயில்வே டிக்கெட்டில் (Indian Railway Ticket Concession) தள்ளுபடி வழங்கப்படும். இந்த பட்டியலில் இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளும் சேர்க்கப்பட்டுள்ளனர்.


அதேபோல் ரயிலில் பயணம் செய்யும் மாணவர்கள், போர் விதவைகள், ஐபிகேஎஃப் விதவைகள், கார்கில் தியாகிகளின் விதவைகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் கொல்லப்பட்ட பாதுகாப்பு வீரர்களின் விதவைகள், தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள், தொழிலாளர் விருது பெற்ற தொழில்துறை தொழிலாளர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த காவலர்கள் விதவைகள், போலீஸ் பதக்கம் விருது வென்றவர்கள், துரோணாச்சார்யா விருது பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விருது வென்றவர்களுக்கு இந்திய ரயில்வேயின் டிக்கெட்டுகளில் தள்ளுபடி பெறுவார்கள்.


இந்த தள்ளுபடி அடிப்படைக் கட்டணத்தில் மட்டுமே கிடைக்கும், மற்ற வசதிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | Sukanya Samriddhi Yojana: செல்வமகள் சேமிப்பு திட்டம்... 21வது வயதில் உங்கள் மகளின் கையில் ரூ.70 லட்சம் இருக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ