நம் எதிர்காலத்திற்கான சேமிப்பு என்று வந்துவிட்டால்  எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன.  அதில் பிபிஎஃப் என்னும் பொது வருங்கால வைப்பு நிதி பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகின்ற சேமிப்பு திட்டமாக உள்ளது. பிபிஎஃப் அல்லது பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் என்பது இந்திய அரசு ஒத்துழைப்புடன் நடத்தப்படும் சேமிப்பு திட்டம். இது வரி சேமிப்பு திட்டமாகவும் இது செயல்படுகிறது. ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும் வரியை சேமிக்கவும், ஓய்வுகால வாழ்க்கைக்கான நிதி ஆதாரத்தை உறுதி செய்யவும் சிறந்த முதலீடு திட்டமாக இது உள்ளது என்பதை மறுக்க இயலாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசால் பல வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். PPF  (Public Provident Fund) என்பது நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். இது முதலீட்டாளர்கள் ஒரு பெரிய அளவிலான நிதியை உருவாக்க உதவுகிறது. நீங்கள் சரியான நேரத்தில் மற்றும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், இதன் மூலம் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்கலாம். PPF முதலீட்டி திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதில் கூட்டு வட்டி கிடைக்கிறது. ஒரு ஊழியர் இதில் முதலீடு செய்ய ஆரம்பித்து ஓய்வு பெறும் வரை நல்ல நிதியை உருவாக்கலாம்.


பிபிஎஃப் மீதான வட்டி (Interest on PPF)


PPF இல் 7.1 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மாதத்தின் 5 ஆம் தேதிக்கும் மாதத்தின் கடைசித் தேதிக்கும் இடையில் என்ன குறைந்தபட்ச இருப்பு இருந்தாலும், அதே மாதத்தில் வட்டி சேர்க்கப்படும். மாதம் 5ம் தேதிக்கு பிறகு எந்த பணத்தை டெபாசிட் செய்தாலும் அடுத்த மாதம் முதல் வட்டி வழங்கப்படும்.


மேலும் படிக்க | உங்களை கோடீஸ்வரர் ஆக்கும் PPF ... ‘இந்த’ டிபஸ்களை ஃபாலோ பண்ணுங்க..!


வரிச் சலுகை கிடைக்கும்


பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வரி விலக்கின் பலனையும் உங்களுக்கு வழங்குகிறது. இந்தத் திட்டத்தில், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கின் பலன் கிடைக்கும். அதுமட்டுமின்றி, இந்தக் கணக்கின் மூலமாகவும் கடன் பெறலாம். மேலும், சில சிறப்பு சந்தர்ப்பங்களில், கணக்கைத் திறந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வு காலத்திற்கு முன்பே அதை மூடலாம். எந்தவொரு வங்கி அல்லது தபால் அலுவலகம் மூலமாகவும் இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் கணக்கைத் தொடங்கலாம்.


கணக்கை ஒரு முறை மட்டுமே திறக்க முடியும்


ஒரு நபர் பொது வருங்கால வைப்பு நிதியில் அதாவது PPF இல் ஒருமுறை மட்டுமே கணக்கைத் திறக்க முடியும். அதே நேரத்தில், டிசம்பர் 12, 2019 க்குப் பிறகு திறக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட PPF கணக்குகள் மூடப்படுவதோடு வட்டியும் வழங்கப்படாது. இது தவிர, பல பிபிஎஃப் கணக்குகளை இணைப்பதற்கும் தடை உள்ளது.


கணக்கை திறப்பது எப்படி


PPF விதிகளின்படி, ஒரு முதலீட்டாளர் தனது PPF கணக்கில் ரூ.100-ல் முதலீடு செய்யத் தொடங்கலாம். இதன் கணக்கை அருகிலுள்ள வங்கியிலோ அல்லது தபால் நிலையத்திலோ தொடங்கலாம். உங்களிடம் PPF கணக்கு இருந்தால், அதில் குறைந்தது 500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள். இந்தத் திட்டத்தில் தனிநபர் ஒரு நிதியாண்டில் மொத்தமாக டெபாசிட் செய்யலாம்.  ஒரு வருடத்தில் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்யலாம்.


முதிர்வுக்குப் பிறகு கணக்கை நீட்டிக்க முடியும்


முதலீட்டாளர் தனது PPF கணக்கை முதிர்ச்சியடைந்த பிறகும் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க விருப்பம் உள்ளது. அதாவது, தினமும் ரூ.417 டெபாசிட் செய்தால் உங்களுக்கென ஒரு பெரிய நிதியை உருவாக்கிக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | NPS விதிகளில் பெரிய மாற்றம்: இனி உங்கள் பணத்தை எடுக்க இந்த புதிய செயல்முறை அவசியம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ