LIC Saral Pension scheme: கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை முதலீடு செய்கிறார்கள். ஓய்வு பெற்ற பிறகு நிதி ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை திட்டமிடுவது மிகவும் முக்கியம். எனவே பங்குச் சந்தை முதல் அரசின் நிதி திட்டங்கள் வரை அனைத்திலும் மக்கள் பணத்தை முதலீடு செய்கின்றனர். இந்தியாவின் அரசு காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் காப்பீட்டுத் திட்டங்களுடன் பல ஓய்வூதியத் பலன்களையும் தருகிறது. சிலர் இந்தத் திட்டத்தை ஓய்வூதியத் திட்டமாகத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு மாதமும் தங்கள் கணக்கில் ஒரு நிலையான தொகையைப் பெறுவார்கள். அதில் சிறந்த ஒரு திட்டமான எல்ஐசி சாரல் பென்ஷன் திட்டத்தைப் பற்றி பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ஜாலி! ஜாலி... ரயில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை மலிவாகிறது! இனி ஜிஎஸ்டி கிடையாது!


இந்தத் எல்ஐசி சாரல் ஓய்வூதியத் திட்டத்தில் ஒரு முறை மட்டும் முதலீடு செய்தால் போதும். ஓய்விற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தைப் பெறலாம். இந்தத் திட்டத்தைத் தேர்வு செய்வதன் மூலம், உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நிதி ரீதியாக பாதுகாப்பான எதிர்காலத்தை வழங்க முடியும். ஒரு ஊழியர் தனியார் துறையிலோ அல்லது அரசுத் துறையிலோ பணிபுரிந்து ஓய்வு பெறுவதற்கு முன் தனது பிஎஃப் நிதி மற்றும் பணிக்கொடைத் தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் போதும். அந்த ஊழியர் தனது வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தின் பலனைப் பெறுவார். இந்த திட்டத்தில் 40 வயதுக்குட்பட்டவர்கள் முதலீடு செய்ய முடியாது. அதே சமயம் 80 வயது வரை எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.



மாதம் 12,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி?


எல்ஐசியின் சாரல் பென்ஷன் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.12,000 வருடாந்திர தொகையை பெற முடியும். இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் முதலீடு செய்வதற்கான வரம்பு எதுவும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பிறகு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர அடிப்படையில் ஓய்வூதியத்தைப் பெறலாம். எல்ஐசி கால்குலேட்டரின் படி, 42 வயதான ஒருவர் ஆண்டுத் தொகையாக ரூ.30 லட்சம் வாங்கினால், அவருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.12,388 ஓய்வூதியம் கிடைக்கும். மேலும், குறிப்பிட்ட சில காரணங்களுக்காக பாலிசியை வாங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு கேன்சல் செய்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் கடனும் பெற முடியும். கூடுதலாக வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் இந்தக் கொள்கையில் வரிச் சலுகையும் கிடைக்கும்.


மேலும் படிக்க | பணி ஓய்வுக்கு முன்னரே NPS மூலம் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்: பட்டியல் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ