SIP Investment Tips: பணவீக்கம் சில காலமாக அதிகரித்து வருவதால், நிதித் திட்டமிடல் குறித்தும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கின்றனர், இருக்க வேண்டியதும் தற்போது அவசியமாகிவிட்டது. இப்போது மக்கள் தங்கள் வாழ்வின் முக்கியமான கட்டங்களாக நினைக்கும் திருமணம், தங்களின் குழந்தைகளின் எதிர்காலம் முதல் தங்களின் முதுமை வரை அனைத்திற்கும் நிதி திட்டமிடலை முன்கூட்டியே செய்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், திருமணத்திற்கு உங்களுக்கு குழந்தைகளை பார்த்துக்கொள்வதே பெரிய கடமையாக மாறும் நீங்களும் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க விரும்பினால், அதாவது அவர்களின் பள்ளிப் படிப்பு, மேற்படிப்பு, அவர்களின் திருமணம் வரையிலான பொறுப்புகளை எந்தப் பதற்றமும் இல்லாமல் சமாளிக்கலாம். 


அதற்கு, அவருடைய பிறப்பில் இருந்தே நிதித் திட்டமிடலைத் தொடங்க வேண்டியது அவசியமாகிறது. நீங்கள் ஒவ்வொரு மாதமும் 5 ஆயிரம் ரூபாயை அவரது பெயரில் முதலீடு செய்யத் தொடங்கினால், உங்கள் குழந்தைக்கு 20 வயதாகும் போது, அவருக்காக ரூ. 50 லட்சம் வரை எளிதாக ஒரு நிதியை உருவாக்கலாம். அது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம். 


SIP-இல் இருந்து பணம் பெறலாம்


இன்றைய காலகட்டத்தில், SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாக இதன் மூலம் நீங்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் பணத்தை முதலீடு செய்கிறீர்கள். இருப்பினும், சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நிலையான வட்டி விகிதங்களை உறுதிப்படுத்த முடியாது. ஆனால் SIP ஆனது சந்தையில் நேரடியாக பணத்தை முதலீடு செய்வதை விட குறைவான அபாயகரமானதாக கருதப்படுகிறது. 


மேலும் படிக்க | புதிய வீடு வாங்க திட்டமிட்டால் உங்களுக்கு இந்த 5 விஷயங்கள் கட்டாயம் தெரிஞ்சிருக்கணும்


நீண்ட காலத்திற்கு, SIP ஆனது, கூட்டு வட்டியின் பலனைப் பெறுவதால், உங்களுக்காகச் செல்வத்தை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். பொதுவாக, SIP-இல் சராசரியாக 12 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும். உங்கள் அதிர்ஷ்டம் நன்றாக இருந்தால், வருமானம் இன்னும் சிறப்பாக இருக்கும்.


உங்கள் குழந்தை பிறந்ததில் இருந்து ரூ.5 ஆயிரம் மாதாந்திர SIP-ஐ ஆரம்பித்து 20 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதனால், 20 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ. 12 லட்சமாக இருக்கும், ஆனால் வட்டி 12 சதவீதத்தின்படி, இந்த முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு ரூ.37,95,740 வட்டி கிடைக்கும். இந்த வழியில், 20 ஆண்டுகளில், முதலீடு செய்யப்பட்ட தொகை மற்றும் வட்டி உட்பட, உங்களுக்கு மொத்தம் ரூ.49 லட்சத்து 95 ஆயிரத்து 740 அதாவது சுமார் ரூ. 50 லட்சம் கிடைக்கும்.


மறுபுறம், நீங்கள் இந்த முதலீட்டை இன்னும் 5 ஆண்டுகளுக்கு அதாவது 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், உங்களுக்கு ரூ.94 லட்சத்து 88 ஆயிரத்து 175 கிடைக்கும். எந்த திட்டத்திலும் நீங்கள் பெற முடியாத தொகை இது. நீங்கள் சுமார் 15 சதவிகிதம் வருமானம் பெற்றால், லாபம் இன்னும் சிறப்பாக இருக்கும். இந்தத் தொகையை உங்கள் குழந்தையின் தொழில் முதல் அவரது திருமணம் வரை எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.


(பொறுப்பு துறப்பு: மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. உங்கள் சொந்த ஆராய்ச்சி மூலமும் அல்லது ஆலோசகர் மூலமும் ஆய்வு செய்யுங்கள்)


மேலும் படிக்க | 7th Pay Commission: எக்கச்சக்க ஊதிய உயர்வு, அதிரடி டிஏ ஹக்.. அரசின் அறிவிப்பு விரைவில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ