7வது சம்பள கமிஷன் அகவிலைப்படி உயர்வு குறித்து முக்கிய அப்டேட்: பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், 1 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு விரைவில் அகவிலைப்படியை (dearness allowance) அறிவிக்கலாம். நிலையான பார்முலாவின் படி, மத்திய அரசு அகவிலைப்படியை மூன்று சதவீதம் உயர்த்தலாம் என்றும் இதனால் 42 ஆக இருக்கும்  அகவிலைப்படி 45 சதவீதமாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை முதலே அமலுக்கு வரும்:
இந்நிலையில் இந்த அகவிலைப்படி உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசின் கீழ் உள்ள 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் (employees) 69 லட்சம் ஓய்வூதியதாரர்களும் (Pensioners) பெரிய அளவில் நிதிப் பலன்களைப் பெறுவார்கள். இதையடுத்து மத்திய ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போது மத்திய ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது, 3 சதவீத உயர்த்தப்பட்டால் அவை, இனி 45 சதவீதமாக மாறும். அதுமட்டுமின்றி இந்த அகவிலைப்படி உயர்வு சென்ற ஜூலை மாதம் முதலே அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு ஜாக்பாட், டிஏ ஹைக் புதிய ஃபார்முலா... அட்டகாசமான அப்டேட் இதோ


அகவிலைப்படி உயர்வு ஊழியர்களுக்கு நிவாரணம் அளிக்கும்:
அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டால் மதிப்பிடப்பட்ட தரவுகளின்படி, மத்திய அரசு ஊழியர்களின் Dearness Allowances அதாவது அகவிலைப்படி அதிகரிக்கப்பட உள்ளது. உண்மையில், பணவீக்க அதிகரிப்பால் ஊழியர்களின் நிதி நிலை சரிவைச் சமநிலைப்படுத்த அல்லது சரிசெய்ய வழங்கப்படும் தொகையை தான், அகவிலைப்படி (Dearness Allowances) எனப்படும்.


செப்டம்பர் மாதத்தில் எந்த நேரத்திலும் அகவிலைப்படி உயர்வு அதிகரிப்பு அறிவிப்பு வெளியாகலாம்:
அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம் உயர்வு ஏழாவது ஊதியக் குழுவின் பார்முலாவின் செய்யப்படும். இதற்கிடையில், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசு செப்டம்பர் முதல் வாரம் அல்லது பதினைந்து நாட்களில் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கு மத்திய ஊழியர்களின் அழுத்தமும் உள்ளது.


மார்ச் 24 ஆம் அன்று அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டது:
ஜூலை முதல் அகவிலைப்படி (Dearness Allowances) மற்றும் அகவிலை நிவாரணம் (Dearness Relief) மூன்று சதவீதம் அதிகரிக்கலாம் என்று AICPI-IW (அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டால் மதிப்பிடப்பட்ட தரவு) இன் டைரி கூறுகிறது. முன்னதாக கடந்த ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 24ஆம் தேதி நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது, அதன் பிறகு DA 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழ்நிலையில், இப்போது மூன்று சதவீத உயர்வுக்குப் பிறகு, அகவிலைப்படி 45 சதவீதமாக இருக்கக்கூடும்.


மத்திய அரசைப் போலவே மாநில அரசுகளும் அகவிலைப்படியை அதிகரிக்கின்றன:
இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், அகவிலைப்படியை உயர்த்தும் மத்திய அரசின் முடிவை மாநில அரசுகள் வழக்கமாக நடைமுறைப்படுத்துகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், மத்தியில் ஆளும் நரேந்திர மோடி அரசின் அகவிலைப்படியை உயர்த்தி ஒரு மாதத்திற்குப் பிறகு, உ.பி., உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் அகவிலைப்படியை அறிவிக்கும்.


மேலும் படிக்க | அரசு ஊழியர்கள் கவனத்திற்கு... குழந்தைகள் கல்வி உதவித்தொகை - இதை மட்டும் செய்ய வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ