EPFO Withrawal Rules: உங்களிடம் PF கணக்கு இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். மாதா மாதம் ஊழியர்களின் சம்பளத்தில் 12% இபிஎஃப் கணக்கில் (EPF Account) டெபாசிட் செய்யப்படுகின்றது. அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. ஊழியர்கள் டெபாசிட் செய்யும் தொகை முழுவதும் இபிஎஃப் கணக்கிற்கு செல்கிறது. நிறுவனம் டெபாசிட் செய்யும் தொகையில் ஒரு பகுதி, இபிஎஃப் கணக்கிலும் ஒரு பகுதி இபிஎஸ் கணக்கிலும் டெபாசிட் செய்ய்யபப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு


பொதுவாக பணி ஓய்வுக்கு பிறகு, இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) இபிஎஃப் தொகையை எடுக்கிறார்கள். எனினும், பணி ஓய்வுக்கு முன்னரும், சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், சில குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) இந்த தொகையை பகுதியளவு எடுக்கலாம். ஏதேனும் நிதி நெருக்கடி ஏற்பட்டால், ஊழியர்களுக்கு இந்த சேமிப்பு நிதியை எளிதாக அணுகுவதற்கு, பிஎஃப் பணத்தை எடுக்கும் விதிகளில் EPFO ​​சில மாற்றங்களை செய்துள்ளது.


PF ஃபண்டில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு வட்டி கிடைக்கிறது. பொதுவாக இது ஒரு மொத்தத் தொகையாக ஓய்வுக்குப் பிறகு திரும்பப் பெறப்படுகிறது. எனினும், இபிஎஃப் சந்தாதாரர்கள் பணி ஓய்வுக்கு முன்னரும் பணத்தை எடுக்கலாம். எவ்வளவு எடுக்க முடியும்? ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியின் மூன்று மாதங்களுக்கு சமமான தொகை, அல்லது அவர்களது கணக்கில் உள்ள இபிஎஃப் தொகையில் (EPF Amount) மொத்த இருப்பில் 75 சதவீதம், எது குறைவாக உள்ளதோ அதை அட்வான்ஸ் அதாவது முன்பணமாக எடுக்கலாம். 


இபிஎஃப் சந்தாதாரர்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான சமீபத்திய விதிகளை பற்றி புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியமாகும். அவற்றை பற்றி இங்கே காணலாம்:


- நிறுவனமும் பணியாளரும் EPF கணக்கில் பங்களிக்கின்றனர். இருப்பினும், EPF கணக்கில் உள்ள தொகையை தன்னிச்சையாக எடுக்க முடியாது.


- EPF கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை ஓய்வு பெற்ற பிறகுதான் எடுக்க முடியும். சில குறிப்பிட்ட காரணகளுக்காக இதை பணி ஓய்வுக்கு முன்னரே எடுக்கலாம். 


- பகுதியளவு தொகையை எடுக்க, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். நோய் சிகிச்சை, உயர்கல்வி, வீடு கட்டுதல் / வாங்குதல் போன்ற அவசரகால சூழ்நிலைகளில் இது பொருந்தும்.


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு டபுள் குட் நியூஸ்: அகவிலைப்படி உயர்வுடன் இதுவும் கிடைக்குமா


- இபிஎஃப் உறுப்பினர் 54 வயதுக்குக் குறையாமல் இருந்தால், ஓய்வு பெறுவதற்கு 1 வருடத்திற்கு முன்பு EPF நிதியில் 90 சதவீதத்தை திரும்பப் பெற EPFO ​​அனுமதிக்கிறது.


- ஆட்குறைப்பு காரணமாக ஓய்வுக்கு முன்னரே வேலையின்மை ஏற்பட்டால், EPF நிதியை எடுத்துக்கொள்ளலாம்.


- ஒரு மாத வேலையின்மைக்குப் பிறகு 75% நிதியைத் திரும்பப் பெறலாம். புதிய வேலை கிடைத்தவுடன், மீதமுள்ள 25% தொகையை புதிய EPF கணக்கிற்கு மாற்றவும் EPFO ​​அனுமதிக்கிறது.


- ஒரு ஊழியர் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் EPF கணக்கில் பங்களித்தால், EPF நிதியை திரும்பப் பெறுவதற்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.


- EPF நிதியை முன்கூட்டியே திரும்பப் பெறும்போது TDS கழிக்கப்படும். ஆனால் பிஎஃப் கணக்கிலிருந்து எடுக்கப்படும் முழுத் தொகையும் 50,000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால், TDS கழிக்கப்படாது.


- முன்கூட்டியே பணத்தை எடுக்கும்போது, PAN சமர்ப்பிக்கப்பட்டால், TDS விலக்கு 10% ஆக இருக்கும். PAN சமர்ப்பிக்கப்படாவிட்டால், அது 30% ஆக இருக்கும். இதற்கு வரியும் இருக்கும்.


- EPF நிலையை ஆன்லைனில் செக் செய்யலாம்.


- UAN மற்றும் ஆதார் இணைக்கப்பட்டிருந்து, நிறுவனம் அதற்கு ஒப்புதல் அளித்திருந்தால், இதை EPFO ​​மூலமாகவும் நேரடியாகச் செய்யலாம். 


மேலும் படிக்க | குட் நியூஸ்: இந்த பணியாளர்களுக்கு PLB போனசில் அட்வான்ஸ் கிடைக்கும்... விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ