PM Kisan Scheme: பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகளின் வங்கிக் கணக்கில் தலா இரண்டாயிரம் ரூபாய் வீதம் மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த உதவியைப் பெற, விவசாயிகள் பிரதமர் கிசான் யோஜனாவின் கீழ் EKYC செயல்முறையை முடிக்க வேண்டும். விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ள இந்த செயல்முறையை உரிய நேரத்தில் முடித்தால், சரியான சமயத்தில் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு வந்து சேரும். விவசாயிகளுக்காக அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது. தற்போது பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 13வது தவணை வழங்கும் காலம் தொடங்கிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசின் நலத்திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு நிதி மற்றும் இதர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், விவசாயிகளுக்காக பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டம், மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களில் மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் அரசின் நிதி உதவி தேவைப்பட்டால், சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.


eKYC செயல்முறை


பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் EKYC ஐப் பெற விரும்பினால், நீங்கள் சில படிகளைப் பின்பற்ற வேண்டும். உங்கள் கேஒய்சி புதுப்பிக்கப்பட்டதா இல்லையா என்பதைச் சரிபார்க்கவும். இதற்குக் காரணம், பிரதம மந்திரி கிசான் யோஜனாக்கான கேஒய்சி அப்டேட் அவசியம். இ-கேஒய்சி செய்த பின்னரே நீங்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியும்.


மேலும் படிக்க | ஜாதி பேரணிகளை ஏன் நிரந்திரமாக தடை செய்யக்கூடாது... உயர்நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!


PM Kisan eKYCஐப் புதுப்பிப்பதற்கான படிகள்:
pmkisan.gov.in க்குச் செல்லவும்.
PM Kisan ekyc ஐ கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
தேடலை கிளிக் செய்யவும்.
மொபைல் எண்ணை உள்ளிடவும். அந்த எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும், அதில் OTP வரும்.
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும்.
இப்போது சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.


மறுபுறம், நீங்கள் வழங்கிய தகவல் ஆதார் அட்டையுடன் பொருந்தினால், உங்கள் PM Kisan eKYC வெற்றிகரமாக இருக்கும் மற்றும் KYC அப்டேட் முடிந்துவிடும்.


அரசின் இந்த உதவித் தொகை தலா இரண்டாயிரம் வீதம் மூன்று தவணைகளில் விவசாயிகளுக்கு அரசால் வழங்கப்படுகிறது. முதல் தவணை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் முதல் மார்ச் வரையிலும் வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க | Earthquake: வங்கக்கடலில் கடும் நிலநடுக்கம்... சென்னைக்கு சுனாமி எச்சரிக்கையா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ