Income Tax Notice: இது வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலம். ஜூலை 31 ஆம் தேதிக்குள் அனைவரும் ஐடிஆர் -ஐ தாக்கல் செய்ய வேண்டும். வரி செலுத்துவோர் (Taxpayers) இதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் வருமான வரி குறித்த சில முக்கியமான விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வருமான வரித்துறையால் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பை விட அதிகமாக வருமானம் ஈட்டும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரியை யார் யார் செலுத்த வேண்டும்? யார் ஐடிஆர் தாக்கல் செய்ய வேண்டும்? யாருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது? வருமான வரித்துறை எதற்கு நோட்டீஸ் அனுப்புகிறது? இப்படி பல கேள்விகள் வரி செலுத்துவோரிடம் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து பண பரிமாற்றங்கள் மீதும் வருமான வரி துறையின் (Income Tax Department) கவனம் இருக்கின்றது. சில வகையான பண பரிமாற்றங்களுக்கு வருமான வரி நோட்டீசும் வரலாம். தந்தை-மகன், கணவன்-மனைவி ஆகிய உறவுகளுக்கு இடையில் பண பரிமாற்றங்கள் இருப்பது சகஜம். அப்படி பரிமாற்றம் செய்யும் நபரா நீங்கள்? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.


வருமான வரி நோட்டீஸ் எப்போது வரும்?


கணவன் மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் வீட்டு செலவுக்கு பணம் கொடுத்தாலோ, அல்லது பரிசாக ஒரு தொகை கொடுக்கப்பட்டாலோ, மனைவி அதற்கு வருமான வரியை (Income Tax) செலுத்த வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் இவை இரண்டுமே கணவரின் வருமானமாக கருதப்படுகின்றது. இந்த தொகைக்காக வருமான வரித்துறையிடமிருந்து மனைவிக்கு எந்த வித நோட்டீசும் (Income Tax Notice) வராது.


மேலும் படிக்க | பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்: ரயில் டிக்கெட் கட்டண சலுகை மீண்டும் வருகிறதா?


ஆனால் இந்தத் தொகையை மீண்டும் மீண்டும் மனைவி எங்காவது முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெற்றால் அந்த சூழ்நிலையில் இந்த வருமானத்திற்கு வரி செலுத்த வெண்டும். அதாவது அந்தத் தொகையிலிருந்து வரும் வருமானம் ஆண்டு அடிப்படையில் மனைவியின் வருமானமாக கருதப்படும். இதற்கு மனைவி வரி செலுத்த வேண்டும். 


வருமான வரி 269SS மற்றும் 269T -இன் கீழ் 20,000 ரூபாய்க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எனினும் பல சந்தர்ப்பங்களில் இதற்கு விலக்கும் அளிக்கப்படுகின்றது. 


யாருக்கு விலக்கு கிடைக்கும்?


தந்தை மகனுக்கு இடையிலும், கணவன் மனைவிக்கு இடையிலும், இது போன்ர நெருங்கிய உறவுகளுக்கு இடையிலும் பண பரிமாற்ற ஏற்பட்டால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கணவனிடம் இருந்து பெறப்படும் தொகைக்கு மனைவிக்கு நோட்டீஸ் வராது. எனினும், மனைவி அந்த தொகையை எங்காவது முதலீடு செய்த அதன் மூலம் வருமானம் ஈட்டினால் அவர் அதற்கு வரி செலுத்த வேண்டும்.


வருமான வரி செலுத்தும் நபர்கள் கண்டிப்பாக சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக வருமான வரித்துறையினர் இந்நாட்களில் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். ஆகையால் வருமான வரி விதிகள், விதி மீறல்கள், அபராதம் ஆகியவற்றின் புரிதல் வரி செலுத்துவோருக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | 8th Pay Commission: DA, TA, HRA, பிற அலவன்சுகளில் அதிரடி ஏற்றம்... மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் அப்பேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ