SBI Sarvottam FD Scheme: நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மூத்த குடிமக்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வழங்கும் சர்வோத்தம் திட்டத்தில் அதிகபட்சமாக 7.90 சதவீத வட்டி  கிடைக்கும். PPF, NSC மற்றும் தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டங்களை விட SBI வழங்கும்  சிறந்த திட்டம் அதிக வட்டியை வழங்குகிறது. SBI வழங்கும் மூத்த குடிமக்களுக்கான இந்த திட்டத்தின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், இது ஒரு வருடம் மற்றும் 2 வருடத்திற்கான திட்டம் மட்டுமே. இந்த திட்டத்தில், குறுகிய காலத்தில் பெரிய நிதியை சேமிக்க முடியும் என்பதோடு, பணத்தை ஒரே இடத்தில் முடக்க வேண்டிய தேவை ஏற்படாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

SBI சர்வோத்தம் FD திட்டத்திற்கான வட்டி


எஸ்பிஐ சர்வோத்தம்  FD திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 2 ஆண்டு டெபாசிட்டுக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கிறது. இந்த வட்டி விகிதம் பொது வாடிக்கையாளர்களுக்கான. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு இந்தத் திட்டத்தில் 7.90 சதவீத வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் செய்யப்படும் ஒரு வருட கால முதலீடுகளுக்கு, பொது வாடிக்கையாளர்களுக்கு 7.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.60 சதவீத வட்டியும் கிடைக்கும். எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் நீங்கள் முதர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்க முடியாது. முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை எடுத்தால், அபராத கட்டணம் செலுத்த வேண்டும்.


கூட்டு வட்டியினால் கிடைக்கும் கூடுதல் பலன்கள்


மூத்த குடிமக்களுக்கான சர்வோத்தம் 1 ஆண்டு வைப்புத்தொகையான ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையிலான ஆண்டு வருமானம் 7.82 சதவீதம் ஆகும். அதேசமயம், இரண்டு வருட டெபாசிட்டுகளுக்கான வருமானம் 8.14 சதவீதம் என்ற அளவில் இருக்கும். ஒரு வருட காலத்திற்கான ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரையிலான மொத்த டெபாசிட்டுகளுக்கு, 7.77 சதவீதமும், 2 ஆண்டுகளுக்கு 7.61 சதவீதமும் வட்டி வழங்குகிறது. இத்திட்டத்தில் கூட்டு வட்டியின் பலன் கிடைக்கும். PPF, NSC மற்றும் தபால் அலுவலகத்தின் சேமிப்பு திட்டங்களை விட SBI சர்வோத்தம் திட்டம் அதிக வட்டியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


குறைந்த பட்ச மற்றும் அதிக பட்ச முதலீடு


எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில், வாடிக்கையாளர் குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்றவர்களுக்கான சிறந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடி மக்கள் பெரும் பலனடையலாம். இத்திட்டத்தில் 2 கோடிக்கு மேல் முதலீடு செய்ய விருப்பமும் உள்ளது. ஆனால் இதற்கு கிடைக்கும் வட்டி 0.05 சதவீதம் குறைவாக இருக்கும். இருப்பினும், இந்தத் திட்டத்தில் ஒருவர் எப்போது பணத்தை முதலீடு செய்யலாம் என்பது குறித்த எந்தத் தகவலும் இணையதளத்தில் இல்லை.


முதிர்வுக்கு முன் பணத்தை திரும்ப பெறுவதற்கான விதி


எஸ்பிஐ சர்வோத்தம் திட்டத்தில் நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன் பணத்தை திரும்ப  பெற முடியாது. முதர்வு காலத்திற்கு முன் பணத்தை திரும்ப பெற்றால், வங்கிகளின் விதிகலீன் படி, குறிப்பிட்ட அளவு தொகையை அபராத கட்டணமாக செலுத்த வேண்டும்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ