தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை வெளுத்து வாங்கப்போகுது - உஷார் மக்களே!

Tamil Nadu yellow alert : தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை வெளுத்து வாங்கப்போகும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 30, 2024, 12:23 PM IST
  • தமிழ்நாடு கனமழை எச்சரிக்கை
  • மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
  • இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை.. கனமழை வெளுத்து வாங்கப்போகுது - உஷார் மக்களே! title=

இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) சென்னை மற்றும் கேரளாவுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இந்த மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி, இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாக இருக்கும். 

மேலும் படிக்க | இது லிஸ்ட்லையே இல்லையே... செந்தில் பாலாஜிக்கு மீண்டும் மதுவிலக்கு துறை - ஸ்டாலினின் திடீர் ட்விஸ்ட்

தமிழ்நாட்டில் மழை குறையும்

அக்டோபர் 1, செவ்வாய்க்கிழமை லேசான மழையுடன் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதற்கிடையில், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாக இருக்கும். அக்டோபர் 3ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும், அப்போது அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை குறையும். அக்டோபர் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் முறையே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், மழைக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும், மேலும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

கேரளாவுக்கு எச்சரிக்கை

அக்டோபர் மூன்றாம் தேதி வரை இந்த மழை நீடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. செப்டம்பர் 30 ஆம் தேதியை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதேபோல், கேரளாவிலும் அக்டோபர் 5 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் அக்டோபர் 1 ஆம் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மாவட்டங்களில் மண்சரிவு ஏற்படும் பகுதிகள் மற்றும் நீர் தேங்கக்கூடிய பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Indian Post Office | தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருக்கா? இந்த அறிவிப்பு உங்களுக்கானது! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News