நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, அமிர்த கலச திட்டம் (SBI Amrit Kalash FD Scheme) என்னும் சிறப்பு எஃப்டி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர் மத்தியில், பலத்த ஆதரவு இருந்ததால், இதில் முதலீடு செய்வதற்கான காலக்கெடும் பலமுறை நீட்டிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது இதற்கான காலக்கெடு, 2024 மார்ச் 31ஆம் தேதி வரை உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு, சாதாரண எப்டி திட்டத்தை விட அதிக வட்டி கிடைக்கும். திட்டத்தின் பயனை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமிர்த கலச திட்ட கிடைக்கும் வட்டி


எஸ்பிஐ வங்கியின் அமிர்த கலச திட்டம், 400 நாட்களுக்கான முதலீட்டு திட்டம் (Investment Tips) ஆகும். இதில் 7.10% வட்டி கிடைக்கும். இந்த வட்டி விகிதம் எஸ்பிஐ வங்கியில் செய்யப்படும் வழக்கமான எஃப்.டியை விட அதிகமாகும். அதிலும் மூத்த குடிமக்களுக்கு இதில் 7.60% வட்டி கிடைக்கும்.


முதலீட்டு பணத்தை முதிர்வு காலத்திற்கு முன்பே எடுப்பதற்கான நிபந்தனைகள்


ஏதேனும் ஒரு காரணத்திற்காக, முதிர்வு காலத்துக்கு முன்பே பணத்தை திரும்ப பெற வேண்டும் என்றால், நீங்கள் பெரும் வட்டி விகிதம் 0.5% முதல் 1% வரை குறைக்கப்படும். அமிர்த கலசம் சிறப்பு எப்படி காண வட்டி, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாதாந்திர, காலாண்டு, அல்லது அரையாண்டுகளில் செலுத்தப்படுகிறது. வட்டித் தொகை உங்கள் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்படும்.


மேலும் படிக்க | வருமானத்தை அள்ளிக் கொடுக்கும்... தபால் அலுவலகத்தின் சிறந்த 5 திட்டங்கள்


எஸ்பிஐ வங்கியின் வழக்கமான எப்டி திட்டங்கள் மீதான வட்டி விகித விவரம்


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பொது மக்களுக்கு, 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு செய்யப்படும் எப்படி முதலீடுகளுக்கு, 3.5% முதல் 7% வரை வட்டி கொடுக்கிறது. இதில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 0.5% அதிகமாகும். அந்த வகையில் சாதாரண எப்படி திட்டங்களுக்கு 4 % முதல் 7.5% என்ற அளவில் வட்டி வழங்குகிறது.


எஸ் பி ஐ  வங்கியின் பிற எப்டி திட்டங்கள்


அமிர்த கலசம் எப்டி திட்டத்தைத் தவிர, எஸ்பிஐ கிரீன் டெபாசிட் இன்னும் திட்டத்தையும் பாரத ஸ்டேட் வங்கி கொண்டு வந்துள்ளது, இதில் முதலீட்டாளர்கள் 1111 நாட்கள், 1777 நாட்கள், 2222 நாட்கள் ஆகிய கால அளவில் டெபாசிட் செய்யலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய, எஸ் பி ஐ வங்கிக்கு செல்ல வேண்டும். எனினும் இது விரைவில் YONO செயலில், இணைய வங்கி சேவைகள் மூலமும் கிடைக்கும்.


மேலும் படிக்க | தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைக்கலாமா? புதிய விதிகள் கூறுவது என்ன?


எஸ்பிஐ விகேர் திட்டம்


மூத்த குடிமக்களுக்கான பிரத்தியேக திட்டமான எஸ்பிஐ விகேர் திட்டம் (SBI WeCare), 2020 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் வழக்கமான விகிதத்தை விட 0.5% கூடுதலாக வட்டி வழங்கப்படுகிறது.


எஸ்பிஐ பெஸ்ட் திட்டம்


எஸ்பிஐ வங்கியின் பெஸ்ட் திட்டத்தில் வழக்கமான எப்படி திட்டத்தை விட அதிக கட்டி வட்டி கிடைக்கும். இரண்டு ஆண்டு கால முதலீடுகளுக்கு 7.4% வட்டியும் ஒரு வருட கால முதலீட்டிற்கு 7.10% வட்டியும் கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு, கூடுதலாக 0.5% வட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | வருமான வரியை சேமிக்கணுமா? பலருக்கு தெரியாத 4 வழிகள் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ