Tips to Become Rich: பணம் என்பது நம் அனைவருக்கும் மிகவும் தேவையான ஒரு விஷயமாகும். ஆடம்பர தேவைகளுக்கு என்றில்லாமல் நம் அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் அவசியம். தங்கள் வாழ்க்கையில் அதிக பணம் சம்பாதித்து நல்ல பணக்காரர்களாக இருக்க வேண்டும் என விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் பணம் ஈட்டுவது அத்தனை எளிதான காரியம் அல்ல. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பணம் சம்பாதிக்க கடின உழைப்புடனும், சேமிக்கும் பழக்கமும், ஒழுக்கமும் தேவை. ஒழுக்கத்துடன் தொடர்ந்து நீண்ட நேரம் உழைக்க வேண்டும். நீங்கள் வேலை செய்தாலும் சரி, வியாபாரம் செய்தாலும் சரி, உங்கள் பணத்தையும் உங்களுக்காக உழைக்க வைத்தால்தான் நீங்கள் விரைவாக பணக்காரராக முடியும். இதுமட்டுமின்றி, நிதி சார்ந்த முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்க வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்திற்குள் அதிக பணம் ஈட்ட முடியும். சில பழக்கங்களை உண்டாக்கிக்கொண்டால் நீங்கள் விரைவாக பணக்காரர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது. அந்த 5 டிப்ஸ் பற்றி இங்கே காணலாம். 


1: முதலில் இலக்குகளை அமைக்கவும் (Set Goals)


நீங்கள் உங்களுக்கான இலக்கை முன்கூட்டியே நிர்ணயித்தால், பணத்தை சேமிப்பதும், அதை அதிகமாக்குவதும் இரண்டும் எளிதாகிவிடும். அந்த இலக்கை எத்தனை நாட்களுக்கு அடைய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். அந்த இலக்கை அடைய உங்களுக்கு ஒரு காரணம் இருந்தால், அது இன்னும் சிறந்தது. ஏனென்றால் அந்த காரணம் தொடர்ந்து உங்களுக்கான ஒரு உந்துதலாக இருக்கும். முறையான திட்டமிடல் மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதையும், அந்தப் பணத்தை எப்படிப் பெறுவது என்பதையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.


2: பட்ஜெட்டை உருவாக்கவும், செலவுகளைக் கண்காணிக்கவும் (Make a Budget)


நீங்கள் பணத்தை அதிகரிக்க விரும்பினால், மிக முக்கியமான விஷயம் பணத்தை சேமிப்பது. பணத்தை சேமிக்க பட்ஜெட்டை உருவாக்குவது அவசியமாகும். வீட்டு வாடகை, மாதாந்திர கட்டணம், வெளியில் சாப்பிடும் செலவுகள் என அனைத்திற்கும் முன்கூட்டியே பட்ஜெட் போட்டு செலவு செய்வது  நல்லது. உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப செலவு செய்ய முயற்சி செய்யுங்கள். உங்கள் செலவுகளை தொடர்ந்து கண்காணிப்பது நல்லது. இதன் மூலம் செலவுகள் நம் பட்ஜெட்டைத் தாண்டி செல்லும்போது அவற்றை கண்காணிகக் முடியும். 


மேலும் படிக்க | Google Pay பயனர்களுக்கு சூப்பர் செய்தி... புதிய அம்சங்கள் அறிமுகம்


3: பணத்தை சேமித்தால் போதாது, முதலீடு செய்வது அவசியம் (Invest your Money)


பணத்தைச் சேமித்தாலே பணக்காரர் ஆகலாம் என நினைத்தால் அது தவறு. பணத்தின் மதிப்பு காலப்போக்கில் தொடர்ந்து குறைகிறது. ஆகையால் தொடர்ந்து உங்கள் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். பணத்தை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்ய முயற்சி செய்வது நல்லது. இதன் மூலம் உங்கள் பணத்தில் கூட்டுச் சூத்திரம், அதாவது காம்பவுண்டிங்க் ஃபார்முலா செயல்படும். இதனால் நாம் முதலீடு செய்த பணம் வேகமாக வளரும்.  ஒருவர் எவ்வளவு சீக்கிரமாக முதலீடு செய்கிறாரோ, எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்துகொண்டு இருக்கிறாரோ, கூட்டுத்தொகையின் உதவியுடன் அவரது பணம் அவ்வளவு அதிகமாக வளரும்.


4: சரியான ஃபைனான்சியல் பிராடெக்டைத் தேர்ந்தெடுக்கவும் (Effective Financial Product)


பணத்தை முதலீடு செய்யும் போது, ​​இரண்டு விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது மிக அவசியம். அதிகபட்ச வருமானம் கிடைக்கும் இடங்களில் பணத்தை முதலீடு செய்ய முயற்சிக்க வேண்டும். மிக முக்கியமாக, ஆபத்தை குறைக்க முயற்சி செய்யுங்கள். இதனால் உங்கள் பணம் வீணாகாமல் பாதுகாக்கப்படும். ஈக்விட்டியில் (Equity) முதலீடு செய்தால், சந்தேகத்திற்கு இடமின்றி அதிக வருமானத்தைப் பெறலாம். ஆனால் அதில் அபாயமும் அதிகமாக இருக்கும். அதேசமயம் நீங்கள் பிக்சட் டெபாசிட் (Fixed Deposit) அதாவது FD, பத்திரங்கள் (Bonds) அல்லது சிறு சேமிப்பு திட்டங்களில் (Small Saving Schemes) பணத்தை முதலீடு செய்தால், ஆபத்து இருக்காது, ஆனால் வருமானம் குறைவாக இருக்கும். உங்கள் ஆபத்தை குறைத்து, ​​பணத்தை இழக்கும் அபாயம் இல்லாமல், உங்களுக்கும் வருமானம் கிடைக்கும் வகையில், வெவ்வேறு இடங்களில் பணத்தை பிரித்து முதலீடு செய்ய முயற்சி செய்யலாம்.


5: அவசரகால நிதியை தயாராக வைத்திருங்கள் (Emergency Fund)


அவசரகால நிதிகள் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளின் போது உதவும். மேலும் இது உங்கள் நீண்ட கால சேமிப்பையும் பாதிக்காது. குறைந்தபட்சம் 6 மாதச் செலவுகளுக்குச் சமமான பணத்தை நீங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். இதனால் நீங்கள் உங்கள் வேலையை இழந்தாலும் அல்லது உங்கள் வணிகத்தில் ஏதேனும் நஷ்டம் ஏற்பட்டாலும், உங்கள் அன்றாடச் செலவுகள் பாதிக்கப்படாமல் சில நாட்களுக்கு உங்களால் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் வாழ்க்கை நடத்த முடியும். நீங்கள் இதைச் செய்யாவிட்டால், தினசரி செலவினங்களைச் சமாளிக்க உங்கள் நீண்ட கால சேமிப்பிலிருந்து பணத்தை எடுக்க வேண்டியிருக்கும். இது எதிர்காலத்தில் சேமிப்புகளிலிருந்து வரக்கூடிய உங்கள் வருமானத்தைக் குறைக்கும்.


மேலும் படிக்க | ITR Filing: ஆன்லைனில் சுலபமாக ஐடிஆர் தாக்கல் செய்வது எப்படி? முழு வழிமுறை இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ