கர்நாடக மாநிலம் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முனி ரத்னா வெற்றி பெற்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 28 ஆம் தேதி மக்களவை தொகுதிகளான உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து போன்ற நான்கு தொகுதிகளுக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலஸ் கடேகோன், உத்தர பிரதேசத்தில் உள்ள நூர்பூர், பீகாரில் உள்ள ஜோகிஹாத், ஜார்கண்டில் உள்ள கோமியா, சில்லி, கேரளாவில் உள்ள செங்கனூர், மேகாலயாவில் உள்ள அம்பாதி, பஞ்சாபில் உள்ள சாகோட், உத்தரகண்டில் உள்ள தாரளி, மேற்கு வங்கத்தில் உள்ள மகேஷ்தலா, கர்நாடகவில் உள்ள ஆர்.ஆர். நகர் ஆகிய பத்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.


இன்று இந்த 14 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் ஆரம்பம்மாகியது. 


விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில், கர்நாடக மாநிலம் ஆர்.ஆர்.நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முனி ரத்னா 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


அதேபோன்று, ராஜராஜேஸ்வரி நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 6வது சுற்று முடிவில் 32 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று, தனது வெற்றியை உறுதி செய்து வருகிறார்.


பஞ்சாப் சாக்கோட் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரட்டி ஷெரோவாலியா 1200 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.


அத்ர்போன்று, கேரளாவில், செங்கானனூர் தொகுதி இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு வேட்பாளர் 3016 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். அதேபோன்று, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் துலால் சந்திரா தாஸ் 20 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று உள்ளார்.


மகாராஷ்டிராவில் உள்ள பல்கார் லோக்சபா  தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளர் கவித் ராஜேந்திரா தென்யா 10 ஆயிரம் வாக்குகள் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளரை விட பெற்று  முன்னிலையில் உள்ளார் என்பது குறிபிடத்தக்கது.