5 நாட்களுக்கு முன்னர் 12 லட்சம் ரூபாயினை கொண்டுச் சென்ற வாகனத்தை திருடிய கும்பள் இன்று சுட்டப் பிடிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐந்த நாண்களுக்கு முன்னர் டெல்லியின் நரேலா பகுதியில் ATM-ல் பணம் நிரப்ப சென்ற வாகனத்தில் இருந்த அதிகாரியை கொன்றுவிட்டு கொல்லை கும்பள் ஒன்று 12 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்தனர்.


சம்பவம் நடந்து சுமார் 48 மணி நேரத்திற்கு பின்னர் இன்று இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்ட கும்பளை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.


பிடிப்பட்ட 5 குற்றவாலிகளில் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மற்ற நான்குப் பேரும் காவல்துறை கண்காணிப்பில் உள்ளனர் என காவல்துறை அதிகாரி சஞ்ஜீவ் யாதவ் தெரிவித்துள்ளார்.


துப்பாக்கி சூட்டின் போது கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றதாகவும், சுமார் 15 முதல் 20 முறை துப்பாக்கி குண்டுகளை சுட்டு குற்றவாலிகளை பிடித்ததாகவும் இச்சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இச்சம்பவம் முழுவதும் சுமார் 15 நிமிடங்களுக்குள்ளாக முடிவடைந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.


இச்சம்பவத்தில் பிடிப்பபட்டவர்களின் மீது வழக்குப் பதிவு செய்து அடுத்தக்கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.