காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி #CPIM உள்பட அனைத்து எதிக்கட்சியினர் ராமநாதபுரத்தில் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக இன்று (ஏப்ரல் 5-ம் தேதி) தமிழகம் தழுவிய பொது வேலைநிறுத்தம் போராட்டம் எதிர்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு பேருந்து ஊழியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி இன்று போராட்டம் காலை 6 மணி முதல் தொடங்கியது. இதற்கு பெரும்பாலான கடைகள் ஒத்துழைப்பு நல்கியுள்ளன. இதற்கு போக்குவரத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்தன.


தமிழகத்தை கண்டித்து கர்நாடகாவிலும் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இன்று முழு அடைப்பையொட்டி தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே போல் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் அத்திப்பள்ளியில் நிறுத்தப்பட்டுள்ளன. 


இந்நிலையில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி #CPIM உள்பட அனைத்து எதிக்கட்சியினர் இராமநாதபுரத்தில் சாலை மறியல் போராட்டம் செய்து வருகிறனர்.