சென்னை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிளினை வழங்கினார் ஆட்சியர் அன்புச்செல்லவன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்ற வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களுக்கான நலத்திட்டங்களை ஆட்சியர் அன்புச்செல்வன் அவர்கள் துவங்கிவைத்தார்.


இதன்படி இன்றைய வாராந்திர கூட்டத்தில்., மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்று த் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார். 


இதனைத் தொடர்ந்து 14 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகளுக்கு ரூ.387380 மதிப்பிலான அத்தியாவச பொருட்கள் மற்றும் ரூ.42730 மதிப்பிலான விளையாட்டு பொருட்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.மா.சௌ. சங்கிதா அவர்களும் கலந்துக்கொண்டார்!