காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக முழுவதும் அனைத்து கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அரை நிர்வாண விழிப்புணர்வு போராட்டம் நடத்தப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை உதயம் திரையரங்கம் ஏதிரே உள்ள தபால் நிலையம் அருகே நடிகர் கூல் சுரேஷ் தலைமையில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அரை நிர்வாண விழிப்புணர்வு போராட்டம் நடைபெற்றது. 


இதில் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் கே.ஜி. சுரேஷ். வைத்தியலிங்கம். மூஸா. மணலி ஜெயபாண்டி. மற்றும் இணையதள சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் காவல்துறை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


வீடியோ:-