வாகனச் சோதனையில் நேற்றிரவு ஈடுபட்டிருந்த பூவிந்தவல்லி காவல் நிலைய தலைமைக் காவலர் அன்பழகனை, வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பாகி உள்ளது. காவலர் அன்பழகனை கத்தியால் குத்திய அந்த 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூந்தமல்லி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலைபார்ப்பவர், அன்பழகன் நேற்று ஒரு மணியளவில் காட்டுப்பாக்கம் ஹட்கோ நகர்ப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வேகமாக வந்துள்ளனர். அவர்களை நிறுத்தி விசாரித்த காவலரை, வண்டியில் வந்த 3 பெரும் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். தலைமை காவலரை கத்தியால் குத்தும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவானது. 


இதையடுத்து, அருகில் இருந்த சில காவலர்கள் காரில் சென்று அந்த மூவரையும் பிடித்துக் கைதுசெய்தனர், மேலும், கத்தியால் குத்தியவர்கள்  பன்னீர்செல்வம், சுதீஸ்குமார் மற்றும் ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டுள்ளது.


காயமடைந்த தலைமை காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.