கேரளாவின் பிரசிதிப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 33 நாட்களில் வருமானம் 128 கோடியை தாண்டியிருப்பதாக தகவகள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில்., நாடுமுழுவதிலும் இருந்து பக்தர்கள் பெருமளவில் கோவிலில் கூடி வருகின்றனர். பெருமளவு பக்தர்கள் வருகையால் குறித்த இந்த இரண்டு மாத கால யாத்திரையின் முதல் 33 நாட்களில் மட்டும் வருமானம் ரூ.128 கோடியைத் தாண்டியுள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து தர்மஸ்தால விவகாரங்களின் மேலாளர் திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் தெரிவிக்கையில்., டிசம்பர் 6-ஆம் தேதிக்குள், அதாவது முதல் 20 நாட்களில் கோவில் வருவாய் ரூ.69.39 கோடியை எட்டியது. இந்நிலையல் தற்போது 33 நாட்கள் கடந்த நிலையில் வருமானம் ரூ.129 கோடியை எட்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இது 2018-19 யாத்திரையின் இதே காலகட்டத்தின் வருமானத்தை விட 30% கோடி அதிகம் எனவும் தெரிவித்துள்ளார்.


முன்னதாக கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி வரை கிடைத்த வருவாய் குறித்து தேவஸ்தானம் போர்ட் வெளியிட்ட பட்டியலில்... 'அர்வன் பிரசாத்' விற்பனையிலிருந்து 28.26 கோடி ரூபாயும், 'அப்பம் பிரசாத்' விற்பனையில் இருந்து 4.2 கோடியும் வருவாய் ஈட்டியுள்ளது. 'ஹுண்டி' வசூலில் இருந்து 23.58 கோடி ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.


முன்னதாக நவம்பரில், கேரள முதல்வர் பினராயி விஜயன், சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய அனுமதிக்கும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தவிர்ப்பதற்கு சட்டங்களை உருவாக்க முடியாது என்று தெரிவித்தார். சபரிமலை இறைவன் ஐய்யப்பா கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் நுழைய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 அன்று அனுமதி அளித்தது. இந்த வரலாற்று தீர்ப்பினை அடுத்து மாநிலத்தில் கடும் போராட்டங்கள் வெடித்தது.


உச்சநீதிமன்ற தீர்ப்பினை செயல்படுத்திய மாநில அரசின் மீது கேரள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் விளைவாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கேரளா ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி படு தோல்வி கண்டது.  கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.


கம்யூனிஸ்டுகளின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. என்றபோதிலும் "கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கேரள முதல்வர் பினராயி அதிரடி அறிவிப்பினை அறிவித்தார்.


மேலும்., சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.


மாநில அரசு தனது நிலைப்பாடில் உறுதியாக இருக்கும் நிலையில், தற்போது மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் போது சபரிமலை கோவிலுக்கும் மகளிர் விஜயம் வழக்கம்போல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் கேரளா சபரிமலை கோவிலுக்கு ஆந்திரா விஜயவாடாவை சேர்ந்த மகளிர் குழு உள்பட பலர் சாமி தரிசனத்திற்காக வந்தரனர், எனினும் பாதுபாக்கு நலன் கருதி அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.