சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய அர்ச்சகராக திருச்சூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் மாளிகப்புறம் முக்கிய அர்ச்சகராக அனீஸ் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


சபரிமலையில் இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இதில் சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி, மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் திருச்சூர் பகுதியை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.