திருவையாறில் அடுத்த மாதம் 11ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா தொடங்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரானவர் தியாகராஜர். இந்த விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெறுகிறது.


இதையொட்டி தியாகராஜர் சமாதி வளாகத்தில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. விழா நாட்களில், பல்வேறு இசைக்கலைஞர்களின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, துவக்கி வைக்கிறார்.