சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் அதிகம் ரசிகர்கள் கொண்டவர்களுக்கான விருது தீபிகா படுகோனே மற்றும் விராட் கோலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் பல பிரபலங்கள் தங்கள் கூறிய கணக்கினை வைத்துள்ளனர். அவரை பின் தொடர்வோர் என கூறப்படும் ரசிகர்கள் எண்ணிக்கையை பொறுத்தும், அவர்களின் ரசிகர்கள் அதிகம் பயன்படுத்தும் கணக்கை பொறுத்தும் இந்தியாவில் இன்ஸ்டாகிராம் விருதுகள் முதல் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.


இதில் இன்ஸ்டாகிராமில் அதிகம் பின் தொடர்வோர்களைக் கொண்டவர் என்னும் விருது பட்டியலில் பிரபல நடிகை தீபிகா படுகோனே மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.


இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனே 2 கோடியே 24 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்வதால் முதலிடம் பெற்றுள்ளார். தீபிகா படுகோண் ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார்.


முன்னதாக, நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான படம் `பத்மாவத்'. திரைப்படம் வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்தியது குறிபிடத்தக்கது.


அவருக்கு அடுத்த படியாக பிரியங்க சோப்ராவை 2.20 லட்சம் ரசிகர்கள் பின் தொடர்வதால் அவருக்கு இரண்டாம் இடம் அளிக்கபட்டுள்ளது.


அவரைத் தொடர்ந்து, 2 கோடி ரசிகர்களைக் கொண்ட ஆலியா பட் மற்றும் ஷ்ரத்தா கபூருக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.


மேலும், கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு 1 கோடி 98 லட்சம் ரசிகர்கள் மற்றும் லைக்குகளும் கமெண்டுகளும் மற்ற பிரபலங்கலை விட அதிகம் என்பதால் அவருக்கு மிகவும் பிரபலமானவர் என்னும் முறையில் விருது வழங்கப்பட்டுள்ளது.