பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள CBSE வினாத்தாள் வெளியான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பயிற்சி நிலையத்தின் உரிமையாளர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் புறநகர் டெல்லி பள்ளியை சேர்ந்த ரிஸாப் மற்றும் ரோகித் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விசாரணையில் இந்த ஆசிரியர்கள் வினாத்தாளினை படம் பிடித்து தனியார் பயிற்சி நிலைய உரிமையாளர் தாகிருக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.


தேர்விற்கு 30 நிமிடம் முன்னரே வினாத்தாள் வெளியானதாகவும், தனியார் பயிற்சி நிலைய உரிமையாளர் தாகிர் மூலமே மாணவர்களுக்கு பகிரப்பட்டுள்ளது எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 53 மாணவர்கள் உள்பட 60 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.


சுமார் 6 WhatsApp குரூப்கள் இந்த வழக்கில் சம்பந்தப் பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளயாகியுள்ளது.


#CBSEPaperLeak...


கடந்த மாதம் 26, 28 தேதிகளில் நடைப்பெற்ற CBSE 12-ஆம் வகுப்பு பொருளாதார பாடம் மற்றும் 10-ஆம் வகுப்பு கணித பாட தேர்விற்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்னரே கசிந்தததாகவும், இவ்விரண்டு பாடத்துக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என CBSE அறிவித்தது.


இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவிக்கையில்... 


வரும் ஏப்ரல் 25-ஆம் நாள் ரத்து செய்யப்பட்ட CBSE, 12 ஆம் வகுப்பு பொருளாதார தேர்விற்கான மறுத்தேர்வு நடத்தப்படும் எனவும், 10 ஆம் வகப்பிற்கான தேர்வின் தேதி 15 தினங்களில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார், மேலும் 10 ஆம் வகுப்பிற்கான தேர்வானது டெல்லி மற்றும் ஹரியான பகுதிகளில் மட்டுமே நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் CBSE 12-ஆம் வகுப்பு தேர்வு பாடமான ஹிந்தி பாட வினாத்தால் ஆனது WhatsApp, Youtube போன்ற சமூக வலைதளங்களில் வெளியானதாக கூறப்படும் தகவல்கள் உன்மை அல்ல எனவும் குறிப்பிட்டார்.


இந்த அறிவிப்பினை தொடர்ந்து, நடத்தப்பட்ட தேர்வினை ரத்து செய்வது ஏற்புடையது அல்ல, முன்னதாக நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும், இந்த விவக்காரம் தொடர்பாக தனி குழு அமைத்து விசாரணை நடத்தி நல்ல முடிவினை எடுக்க வேண்டும் எனவும் SSC, NEET பயிற்சி மாணவர்கள் மற்றும் CBSE மாணவர்கள் போராட்டம் நடத்த தொடங்கினர்.


பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில்.. முன்னதாக நேற்று ஜார்க்கண்டில் 9 சிறுவர்கள் உள்பட பயிற்சி மைய உரிமையாளர் என 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.