தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான கொலை மிரட்டல் வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வு முடிவினால் மாணவ, மாணவிகள் யாரும் தற்கொலை முடிவுக்கு போக வேண்டாம் என்றும் ‘ஒரு கதவு மூடினால் மறு கதவு திறக்கும் என்கிற பழமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.  


இந்நிலையில், சமீபத்தில் அரசு வழக்கறிஞர் ஞானசேகரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரணை செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.  அதில், அரசு வழக்கறிஞர் ஞானசேகரனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை.