சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்ததால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. பல உலக நாடுகள் வட கொரியா மீது பொருளாதார தடை விதித்தது. ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல் வடகொரியா கிம் ஜோங் உன் தொடர்ந்து அணு ஆய்த சோதனைகளை மேற்க்கொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கட்டத்தில் நாங்கள் நினைத்தால் அமெரிக்காவை அழித்துவிடுவோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். வடகொரிய அதிபரின் மிரட்டலை அடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவை அழித்து விடுவோம் என மிரட்டல் விடுத்தார். இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. 


இந்நிலையில், தென் கொரியாவில் புதிய அதிபர் பதவியேற்றவுடன், வட கொரியாவுடன் பேச்சுவாரத்தை நடத்த தயார் என அறிவித்தார். சமீபத்தில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றதைத் தொடர்ந்து அந்த நாடுகள் இடையே ஒரு இணக்கமான சூழல் உருவாகியது. கடந்த மாதம் (ஏப்ரல்) 27 ஆம் இரு நாட்டி தலைவர்களும் சந்தித்து பேசிக்கொண்டனர். இதனை வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு என உலக நாடுகள் பாராட்டினர். 


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம் அறிவித்தார். கடந்த 4-ம் தேதி டெனால்ட் டிரம்ப் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை சந்தித்துப் பேசப்போகும் தேதியும், இடமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் அதுவரை காத்திருங்கள் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை சந்திப்பை குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு கிம் ஜாங் உன்-னுடன் நடக்க உள்ளது. இந்த சந்திப்பு ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடக்க உள்ளது. இது முக்கிய தருணம். இந்த சந்திப்பில் உலக சமாதானத்திற்கான முயற்சிகள் இருநாடுகளும் மேற்கொள்ளும்" என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.