கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது பல்வேறு மாநிலங்களுக்கு அல்லது தங்கள் சொந்த மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்த CBSE 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள், நிலுவையில் உள்ள வாரிய தேர்வுகளுக்கு தாம் இருக்கும் தேர்வு மையத்தில் இருந்து தேர்வு எழுதலாம் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் 'நிஷாங்க்' தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கைப்பிடிப்பின் வாயிலாக இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.


மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் வெளியிட்டுள்ள அறிவிப்பு, COVID-19 நெருக்கடியைக் கருத்தில் கொண்டு தங்கள் சொந்த மாநிலம் அல்லது மாவட்டங்களுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான CBSE மாணவர்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



முன்னதாக, மனிதவள மேம்பாட்டு அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., “தங்கள் மாவட்டங்களில் தங்களது தேர்வு மையங்களை பெறாத மாணவர்களுக்கு ஒரு பெரிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும்" குறிப்பிட்டிருந்தார்.



மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், CBSE 10-வது 12-வது வாரிய தேர்வுகள் 2020 ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. மீதமுள்ள வாரிய தேர்வுகள் மாணவர்களின் சொந்த பள்ளிகளில் நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் முன்பு உறுதிப்படுத்தியிருந்தார்.


 



CBSE சமீபத்தில் மீதமுள்ள 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட தேதிகளை வெளியிட்டது. அதன்படி மீதமுள்ள 29 தாள்களுக்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் 2020-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை பல்வேறு மையங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.