திருப்பூர் மாவட்டம் பல்லடம் செம்மி பாளையத்தை சேர்ந்தவர் கோமதி என்பவர். இவர் கடந்த 4ஆம் தேதி பணி முடிந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக தீடிரென சாலை விபத்து ஏற்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது, சிகிசைக்காக கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, தலையில் பலத்தக் காயமடைந்ததால், அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.


இதையடுத்து, உடல் உறுப்புகளை பிரித்தெடுக்கும் அறுவை சிச்சை நடைபெற்றது. அதில் கல்லீரல், சிறுநீரகம், இருதயம், எலும்பு மற்றும் தோல் உள்ளிட்ட உறுப்புகள் கோவை மற்றும் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் காரணமாக எட்டு பேருக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது.