நாடு முழுவதும் 300 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு சுஷ்மா சுவராஜ் வாழ்த்து!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியதிலிருந்தே பாஜக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. பீகார், உத்திரப்பிரதேசம், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், அருணாச்சல் பிரதேசம், குஜராத், மகாராச்டிரா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் உள்ள பாஜகவினரும் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் இந்நிலையில் பாஜகவின் பாராளுமன்ற குழுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. மேலும் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடி இன்று மாலை 5.30 மணியளவில் கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் அமித்ஷா மற்றும் மூத்த மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் இதில் வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 



இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரியும் பாஜக மூத்த  தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் டுவிட்டரில் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பாஜகவுக்கும் மிகப்பெரும் வெற்றியை உறுதி செய்துள்ள பிரதமர் மோடிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மக்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.