ஒடிசாவில் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு எய்ம்ஸ் மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அவர்களின் தலையை பிரித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கந்தமால் மாவட்டம் மிலிபடா கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது இரட்டை குழந்தைகளான ஜகா – காலியா தலை ஒட்டிப் பிறந்தவர்கள். தலை ஒட்டிப் பிறந்ததால் மிகவும் சிரமப்பட்ட இவர்களுக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.


அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் 11 மணி நேர அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த 11 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் இவர்களின் தலை பிரிக்கப்பட்டதுடன், பிளாஷ்டிக் சர்ஜரி சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இந்த இரட்டை குழந்தைகளின் உடல் நலன் சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.