உலகம் முழுவதும் பீர் அல்லது ஆல்கஹால் உட்கொள்ளும் நபர்கள் பலர் உள்ளனர். தங்கள் ஆடம்பர விருப்பத்திற்காக மது பழக்கம் கொண்டுள்ள பலரும் சில முக்கியமான விஷயங்களை கவனிப்பதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுப்பிரயர்களின் இந்த கவனக்குறைவு அவர்களது உடல் நலத்திற்கே கேடாய் அமையலாம். ஆம்., தங்கள் உடல்நலத்தை கவனிக்காமல் பீர் குடித்த உடனேயே திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை சாப்பிடுவோர் பலர் உள்ளனர். அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


தேன்: நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...


ஆல்கஹால் குடித்த பிறகு, சிட்ரஸ் பழத்திலிருந்து வரும் சிட்ரிக் அமிலம் ஆல்கஹால் உடன் இணைந்து ஆபத்தான வாயுவை உருவாக்குகிறது. இந்த வாயு இதயம் மற்றும் வயிறு இரண்டிற்கும் ஆபத்தானது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்த காரணத்திற்காக, புளிப்பு பழங்களை ஆல்கஹால் எடுத்துக்கொண்ட பிறகு சாப்பிடக்கூடாது. இது மட்டுமல்லாமல், ஆல்கஹால் குடித்துவிட்டு இரவில் தாமதமாக உணவை உட்கொள்பவர்களும் சிட்ரஸ் பழங்களை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்சினையை அதிகரிக்கும். 


சிட்ரஸ் பழங்கள் ஆல்கஹாலுடன் மிகவும் ஆபத்தானவை என்பது சிலருக்குத் தெரியும். என்றபோதிலும் அவர்கள் பழங்களை சாப்பிட விரும்புகின்றனர். அவ்வாறு நீங்கள் பழங்களை சாப்பிட விரும்பினால், படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த பழத்தை சாப்பிடுங்கள். 


ப்ரா அணியாவிட்டால் உடலில் ஏற்படும் 7 அற்புதமான விஷயங்கள்...!


அதேப்போல் காலையில் எழுந்தவுடன் புளிப்பு பழங்களை உடனடியாக சாப்பிடக்கூடாது, ஏனென்றால் சிட்ரிக் அமிலம் வெறும் வயிற்றில் இரைப்பை எரிச்சல் உண்டாக்கும். 


மது பழக்கம் கொண்டவர்கள் மதுவை விரும்பி குடிப்பதில் தவறில்லை, ஆனால் அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்து மதுவை பருக வேண்டும். இல்லையெனில் அவர்களது உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படலாம், மேலும் அந்த விளைவு அவர்களது உயிரையும் எடுக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.